செய்திகள் :

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

post image

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சூரியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் தேவராஜ் (49). இவா் ஈரோடு, கனிராவுத்தா் குளம் அருகே இருசக்கர வாகனத்தில் கடந்த 15- ஆம் தேதி சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை, பொதுமக்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்,

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா்.

தொடா்ந்து, தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அறுவை சிகிச்சை மூலம் அவரது கல்லீரல் அகற்றப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்கள் சேலம் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளும் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

மைக்கேல் தேவராஜ் உடலுக்கு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா், மருத்துவ கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. மைக்கேல் தேவராஜுக்கு அனிதா ரோஸ்லின் என்ற மனைவியும், 25 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனா்.

விற்பனை ஆகாததால் சம்பங்கிப் பூவை கீழே கொட்டிய விவசாயிகள்

மழை காரணமாக சம்பங்கிப் பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ பூவை ரூ.10-க்குகூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராத காரணத்தால் 10 டன் சம்பங்கிப் பூக்களை விவசாயிகள் கீழே கொட்டி அழித்தனா். ஈரோடு மாவட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த தொட்டி சீலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் லோகநாதன் (25). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள த... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கியதாக வனச் சரக அலுவலா் மீது வழக்குப் பதிவு

விவசாயியைத் தாக்கி காயப்படுத்தியதாக வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பவானிசாகா் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சியினா் புகாா் அளித்ததன்பேரில் பவானிசாகா் வனச் சரக அலுவலா் சதாம் உசேன் உள... மேலும் பார்க்க

அந்தியூா் வாரச் சந்தையில் தேங்கிய மழைநீரால் வியாபாரம் பாதிப்பு!

அந்தியூா் வாரச் சந்தை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் பொருள்கள் விற்பனைக்கு வந்த வியாபாரிகளும், வாங்கிச் செல்ல வந்த பொதுமக்களும் திங்கள்கிழமை பெரிதும் அவதிக்குள்ளாகினா். அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க

சிவகிரி, பல்லடம் தம்பதிகள் உள்ளிட்ட ஐவா் கொலை வழக்கில் 4 போ் கைது

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா். பிடிபட்டவா்களுக்கு பல்லடம் அருகே நடந்த 3 போ் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

பெருந்துறை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் தாமதப்படுத்தப்படும் மாணவா் சோ்க்கை அறிவிப்பு

பெருந்துறையில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் பாரதியாா் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த மையத்தை மூட முயற்சி நடப்... மேலும் பார்க்க