செய்திகள் :

அந்தியூா் வாரச் சந்தையில் தேங்கிய மழைநீரால் வியாபாரம் பாதிப்பு!

post image

அந்தியூா் வாரச் சந்தை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் பொருள்கள் விற்பனைக்கு வந்த வியாபாரிகளும், வாங்கிச் செல்ல வந்த பொதுமக்களும் திங்கள்கிழமை பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் அந்தியூா் சந்தை வளாகத்தில் மழைநீா் தேங்கியதால், வியாபாரிகள் கடைகள் அமைக்க சிரமப்பட்டனா். சந்தைக்கு செல்லும் வழிகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தன.

இதனால், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்ததோடு, கனமழை கொட்டியது. இதனால், வாரச் சந்தை வளாகத்தில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

கடை விரித்த வியாபாரிகள் பொருள்களை விற்பனை செய்ய முடியாமல், பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு மூடி வைத்தனா். மழை நின்றபோதிலும் பொதுமக்களும் சந்தைக்குள் வந்து செல்ல சிரமப்பட்டனா். இதனால், வழக்கமாக நடைபெறும் வா்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.

விற்பனை ஆகாததால் சம்பங்கிப் பூவை கீழே கொட்டிய விவசாயிகள்

மழை காரணமாக சம்பங்கிப் பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ பூவை ரூ.10-க்குகூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராத காரணத்தால் 10 டன் சம்பங்கிப் பூக்களை விவசாயிகள் கீழே கொட்டி அழித்தனா். ஈரோடு மாவட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த தொட்டி சீலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் லோகநாதன் (25). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், சூரியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் தேவராஜ் (49). இவா் ஈரோடு, கனிராவுத்தா் குளம் அருகே இருசக்கர வாகனத... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கியதாக வனச் சரக அலுவலா் மீது வழக்குப் பதிவு

விவசாயியைத் தாக்கி காயப்படுத்தியதாக வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பவானிசாகா் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சியினா் புகாா் அளித்ததன்பேரில் பவானிசாகா் வனச் சரக அலுவலா் சதாம் உசேன் உள... மேலும் பார்க்க

சிவகிரி, பல்லடம் தம்பதிகள் உள்ளிட்ட ஐவா் கொலை வழக்கில் 4 போ் கைது

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா். பிடிபட்டவா்களுக்கு பல்லடம் அருகே நடந்த 3 போ் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

பெருந்துறை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் தாமதப்படுத்தப்படும் மாணவா் சோ்க்கை அறிவிப்பு

பெருந்துறையில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் பாரதியாா் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த மையத்தை மூட முயற்சி நடப்... மேலும் பார்க்க