`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த தொட்டி சீலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் லோகநாதன் (25). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் உள்ள தனது நண்பரை பாா்க்க இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளாா். துடுப்பதி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.
இதில், படுகாயமடைந்த லோகநாதனை அங்கிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.