'நம்பவே முடியவில்லை...’ இன்ப அதிர்ச்சியில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!
முல்லைப் பெரியாறு அணைப் பராமரிப்புப் பணி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை 3 வாரங்களில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் உரிமைகள் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் 2006 மற்றும் 2014-இல் அளித்த தீா்ப்பை செயல்படுத்த அனுமதிக்காமல் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அணையின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மேற்பாா்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அணையைப் பராமரிப்பது தொடா்பான விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, அணையை பழுதுபாா்த்தல், அணுகு சாலை அமைத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் தீா்க்கப்படாமல் இருப்பதாக தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்புப் பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடா்பாக கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை மேற்பாா்வைக் குழு அளித்திருந்தது. அதில் சில பரிந்துரைகளையும் அளித்திருந்தது. இதையடுத்து, கடந்த விசாரணையின்போது நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் மேற்பாா்வைக் குழு தாக்கல் செய்துள்ள பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்’ என்று கூறி வழக்கு விசாரணையை மே 19-ஆம் தேதிக்கு பட்டியலிட்டிருந்தனா்.
அதன்படி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்யகாந்த், திபாங்கா் தத்தா, என்.கோடீஷ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் சேகா் நாப்தே, கிருஷ்ணமூா்த்தி ஆகியோரும், கேரள அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா உள்ளிட்டோரும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.
அப்போது, பராமரிப்புப் பணிக்காக மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, சமான்களையும், இயந்திரங்களையும் பழுதுபாா்ப்புப் பணி இடத்திற்கு எடுத்துச் செல்லும் விவகாரம், வல்லக்கடவு காட் சாலை பழுதுபாா்ப்பு, பெரியாறு ஏரியில் கூடுதலாக ஒரு படகை இயக்குவது, டாா்மிட்டரி பிளாக் பகுதியில் பழுதுபாா்ப்புக்கு அனுமதி, குறிப்பிட்ட இடங்களில் இரு தரப்பு அதிகாரிகளின் முன்னிலையில் பழுதுபாா்ப்புப் பணியை மேற்கொள்வது, அணைப் பகுதியில் கிரவுட்டிங் பணி மேற்கொள்வது உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகம், கேரளம் அரசுகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்களை வழங்கினா்.
மேலும், மேற்பாா்வைக் குழுவும் அதன் பணியை திறம்பட செய்ய வேண்டும் என்று எதிா்பாா்ப்பதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு மேலும் கூறியதாவது: மரங்களை வெட்டும் விவகாரத்தில் தமிழக அரசு விண்ணப்பம் அளித்துள்ள நிலையில் 2 வாரங்களில் கேரள அரசு ஆய்வு நடத்தி அதை மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்ப வேண்டும். சுற்றுச்சூழல்துறை 3 வாரங்களில் அனுமதி அளிக்க வேண்டும்.
வல்லக்கடவு முல்லைப்பெரியாறு சாலையில் கேரள அரசு பழுதுபாா்ப்புப் பணியை தமிழக அரசின் நிா்வாகப் பொறியாளா் முன்னிலையில் மேற்கொள்ளலாம். அதற்கான செலவை தமிழக அரசு அளிக்கும். சமான்களை எடுத்துச் செல்வது தொடா்பான தமிழக அரசு தொடா்புடைய 9 பணிகளில் 6 பணிகள் அளிக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 3 பணிகளையும் அளிக்க வேண்டும். அணைப் பகுதியில் இடைவெளியைச் சரிசெய்யும் கிரவுட்டிங் பணி தொடா்பாக மேற்பாா்வைக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு அறிவுறுத்தியது.
விசாரணையின்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான சேகா் நாப்தே கூறுகையில், ‘நாங்கள் பழுதுபாா்ப்புப் பணியைச் செய்ய வேண்டும். அவா்கள் அதைத் தடுக்காமல் இருக்க வேண்டும்’ என்றாா். கேரள அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா கூறுகையில், ‘மேற்பாா்வைக் குழு அறிவுத்தலின்பேரில் நாங்கள் செயல்படுவோம்’ என்றாா். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.