செய்திகள் :

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!

post image

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் (வயது 95) செவ்வாய்க்கிழமை காலமானார்.

கர்நாடகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீனிவாசன், உதகையில் வசித்து வந்த நிலையில், வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இவரின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1955 ஆம் ஆண்டு அணுசக்தி துறையில் சேர்ந்த சீனிவாசன், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார்.

1974 ஆம் ஆண்டு அணுசக்தி துறையின் மின் திட்டங்கள் பொறியியல் பிரிவு இயக்குநர், 1984 ஆம் ஆண்டு அணுசக்தி வாரியத்தின் தலைவர், 1987 ஆம் ஆண்டு அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய அணுசக்தி திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதற்காக சீனிவாசனுக்கு பத்ம விபூஷண் விருந்து வழங்கி கெளரவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில்,

“மூத்த அணு விஞ்ஞானியும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான டாக்டர் எம்.ஆர். சீனிவாசனின் மறைவு, இந்தியாவின் அறிவியல் சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும்.

இந்தியாவின் முதல் அணு உலையான அப்சராவில் (1956) டாக்டர் ஹோமி பாபாவுடன் தனது புகழ்பெற்ற வாழ்க்கையைத் தொடங்கிய சீனிவாசன், அணுசக்தி ஆணையத்தின் தலைவர் மற்றும் திட்டக் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை 18 அணு மின் அலகுகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

அவரது தொழில்நுட்பத் திறமையும், அசைக்க முடியாத சேவையும் இந்தியாவின் அணுசக்தி நிலப்பரப்பில் ஒரு நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளன.

அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!

ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூபா

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "போர் பாதிக்குள்ளான மண்டலங்கள்" என்று அறிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். செய்தியாள... மேலும் பார்க்க

வெளிநாடு செல்லும் குழுவிலிருந்து யூசுப் பதான் விலகல்! அபிஷேக் பானர்ஜி சேர்ப்பு!

வெளிநாட்டுக்குச் செல்லும் எம்பிக்கள் குழுவிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகியதாகவும், அவருக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி செல்வார் என்றும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபரேஷ... மேலும் பார்க்க

மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?

சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி தெரிவித்த நிலை... மேலும் பார்க்க

விளையாட்டு வீரர்களுக்குத் தில்லி அரசு உரிய வசதிகள் வழங்கும்: முதல்வர்!

தில்லி விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாஜக அரசு வழங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். தல்கடோரா மைதானத்தில் தில்லி விளையாட்டு-2025ஐ முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

இந்தியாவில் 257 பேருக்கு கரோனா! தமிழகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் பாதிப்பு!

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தற்போது சீனா, சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாகப் பரவி வருகிறது. இந்தி... மேலும் பார்க்க

நீதித்துறை பணிக்கு 3 ஆண்டுகள் வழக்குரைஞர் அனுபவம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நீதித்துறை பணியில்(முன்சீப், மாஜிஸ்திரேட்) விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆ... மேலும் பார்க்க