செய்திகள் :

ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூபா

post image

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "போர் பாதிக்குள்ளான மண்டலங்கள்" என்று அறிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய போர்ப் பதற்றம் காரணமாக காஷ்மீரில் பலர் உயிரிழந்தனர். இதனிடையே சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள பல பகுதிகளுக்குச் சென்று ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளையும், மக்களின் வாழ்கையில் ஏற்பட்ட தாக்கத்தையும் நேரில் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

போரினால் பாதித்த பகுதிகளைப் போர் பாதிப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதனால் மக்களின் மறுவாழ்வுப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஷெல் தாக்குதலால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். போரில் உயிரிழந்த அனைவரும் தியாகிகள் அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் கோருகிறேன். காஷ்மீர் மக்கள் அப்பாவிகள், அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

பூஞ்ச், உரி, டாங்தார் மற்றும் குப்வாரவின் சில பகுதிகளில் ஷெல் தாக்குதல் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. பலரது குடும்பங்கள் சிதைந்தன, வீடுகள் தரைமட்டாகியது. தங்குவதற்கு இடமில்லாமல் பலர் வீடுகளை இழந்து திறந்தவெளியில் வாழ்கின்றனர். சேதத்தை ஈடுபட்ட வங்கிகள் காப்பீடு வழங்க மறுப்பதாகவும் அவர் கூறினார்.

இதில் மத்திய அரசு தலையிட வேண்டும். வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டியவர்களின் வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில், அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மக்கள் எப்போதும் போரைப் பற்றி சிந்திக்க வேண்டுமா என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும். போர் ஒரு தீர்வல்ல, போரை ஆதரிப்பவர்கள் எல்லைப் பகுதிகளில் தங்கள் குடும்பங்களுடன் வந்து வாழ வேண்டும். அப்போது தான் உண்மையில் போர் என்றால் என்ன என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.

போர் எதற்கும் தீர்வாகாது. நமக்கு இரு தரப்பிலும் உயிரிழப்புகள் உள்ளன. போருக்கு நாம் செலுத்த வேண்டிய வட்டி இதுதான் என்று அவர் கூறினார்.

சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு என்ன சாதிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது என்றாலும், எல்லையில் வசிக்கும் மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேறு என்ன சாதிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பயங்கரவாதிகள் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளனர். அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

வெளியுறவு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானை முன்பே எச்சரித்ததாகக் கூறினார், நீங்கள் அவர்களை எச்சரித்தபோது, ​​பயங்கரவாதிகள் தப்பிக்க வாய்ப்பளித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரபார்ந்த நெறிமுறிகளில் இருந்து தவறி நடந்த அதிகாரிகள் மீத... மேலும் பார்க்க

மோடியின் 151 வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பலன்? கார்கே

11 ஆண்டுகளில், 72 நாடுகள் மற்றும் 151 வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தாலும், இந்தியா தற்போது தனிமைப்படுத்தப்பட்டதைபோன்று உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை!

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கர்நாடகத்தின் கடல் பகுதியில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாகக் கூடும் எனக் கூறப்பட... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையில் சாவர்க்கர், மாளவியா படங்கள்!

தில்லி சட்டப்பேரவையில் விரைவில் சாவர்க்கர், மாளவியா ஆகியோரின் படம் திறக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி சட்டப்பேரவையில், விநாயக் தாமோதர் சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா மற்றும் தயாநந்... மேலும் பார்க்க

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வெள்ளம், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வயநாடு உள்ளிட்ட கேரளத்தின் 4 வட மாவ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’! 5 பேர் பலி

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையினால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று (மே 20) பெய்து வரும் கனமழையினால், 7 கடலோர மாவட்டங்கள் மற... மேலும் பார்க்க