செய்திகள் :

வெடித்த வன்கொடுமை விவகாரம்; தலைமறைவான திமுக இளைஞரணி நிர்வாகி - பதவியைப் பறித்த உதயநிதி

post image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் நிர்வாகியாகவும் பொறுப்புகள் வகித்துவந்தார். இந்த நிலையில், அரக்கோணம் அருகிலுள்ள 21 வயது கல்லூரி மாணவி ஒருவர், டி.ஜி.பி அலுவலகம் வரை சென்று தெய்வச்செயல் மீது கொடுத்திருக்கும் வன்கொடுமைப் புகார் அரக்கோணத்தையே அதிர வைத்திருக்கிறது. தனது புகார் மனுவில், திருமண மோசடி, பல பெண்களுடன் தொடர்பு, உடல் முழுவதும் கடித்து சித்ரவதை, கொலை மிரட்டல் என தெய்வா மீது புகார்களை அடுக்கியிருக்கிறார் அந்த மாணவி.

25 வயதான மேலும் ஒருப் பெண்ணும், தன்னை 5 ஆண்டுகளாக தெய்வச்செயல் ஏமாற்றிவந்ததாக குற்றம் சுமத்தியிருந்தார்.

தெய்வச்செயல்

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தெய்வச்செயலின் கட்சிப் பதவியை பறித்து ஓரங்கட்டியிருக்கிறார் துணை முதலமைச்சரும் தி.மு.க-வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் பெயரில் வெளியாகியிருக்கும் அறிவிப்பில், ``அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞரணித் துணை அமைப்பாளர் தெய்வா என்கிற தெய்வச்செயல், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக காவனூர் பள்ளிக்கூடத் தெருவைச்சேர்ந்த கவியரசு என்பவர் அப்பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Qatar: 'ட்ரம்புக்கு ஜெட் வழங்கியது லஞ்சமா?' - விமர்சனங்கள் குறித்து கத்தார் பிரதமர் விளக்கம்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன... மேலும் பார்க்க

புதுச்சேரி: கொரோனா தொற்று… மக்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது சுகாதாரத்துறை!

புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளித்து தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி சுகாதாரத்துறை... மேலும் பார்க்க

'அது வருத்தம் தான்' - காங்கிரஸ் கட்சி குறித்து கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கோவையில் கட்சிப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வ... மேலும் பார்க்க

TVK : ``திமுகவை அப்படி சொல்லாதீங்க திருமா அண்ணா" - ஆதவ் அர்ஜூனா காட்டம்

'ஆதவ் அர்ஜூனா பத்திரிகையாளர் சந்திப்பு!'விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா அக்கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார... மேலும் பார்க்க

Shashi Tharoor: 30 ஆண்டுகால ஐ.நா அனுபவம் டு காங்கிரஸ் சீனியர் தலைவர் - சசி தரூரை குறிவைக்கிறதா BJP?

பாஜக-வின் `ஆபரேஷன் சௌத்'தில் இப்போது ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர் காங்கிரஸின் சசி தரூர்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்' பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்... மேலும் பார்க்க

நீட் பயத்தால் மாணவன் தற்கொலை; 'ஒரே ஒரு முறை பெற்றோர்களை சிந்தித்துப் பாருங்கள்' - எடப்பாடி பழனிசாமி

சேலம், சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டியில் மாணவர் ஒருவர் நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்தும், திமுகவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி... மேலும் பார்க்க