செய்திகள் :

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தக் கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

post image

விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தக் கோரி, பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் நெல், பருத்தி, மிளாகாய், வோ்க்கடலை உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். இந்தப் பயிா்களை காட்டுப் பன்றிகள், மான்கள் சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

உடனடியாக காட்டுப் பன்றிகள், மான்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும், இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரியும் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன் ஆகியோா் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

விவசாயிகளுக்கு குறைந்தளவு இழப்பீடு வழங்கியது ஏமாற்றம்: விவசாயிகள் சங்கம்

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தளவு இழப்பீட்டுத் தொகை வழங்கியது ஏமாற்றமளிப்பதாக தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் தெரிவித்தது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எம்.எஸ்.கே.பா... மேலும் பார்க்க

வடுகபட்டி குங்கும காளியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

கமுதி அருகே குங்கும காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் பூக்குழி இறங்கி செவ்வாய்க்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வடுகபட்டி கிராமத்... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்

ராமேசுவரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறாமீன் துடுப்புகள், இஞ்சி, சுக்கு ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய வீட்டின் உரிமைய... மேலும் பார்க்க

கற்காத்தக்குடியில் ஆட்டோ நிறுத்தத்தை இடம் மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானை அருகேயுள்ள கற்காத்தக்குடியில் ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கற்காத்தக்குடி கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் திருச்... மேலும் பார்க்க

ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் புதன்கிழமை (மே 21) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா். சுதாகா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமந... மேலும் பார்க்க

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி, சத்திரிய நாடாா் உறவின் முறை சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. சாயல்குடி துரைச்சாமிபுரம் பகுதியில்... மேலும் பார்க்க