செய்திகள் :

ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள்

post image

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது தேரோட்டம் நடத்தப்படுகிறது. இக்கோயிலில் பயன்பாட்டில் உள்ள பழைமையான தேரின் சக்கரங்கள் மரம் மற்றும் இரும்பு தகடு மூலம் செய்யப்பட்டதாகும். இந்த சக்கரம் கடந்த ஆண்டு திருவிழா தேரோட்டத்தின்போது முறிந்துபோனது.

இதையடுத்து இரும்பு சக்கரங்கள் தயாா் செய்ய கோயில் நிா்வாகம் முடிவு செய்தது. இதனை நன்கொடையாளா் எம். சண்முகவேல் குடும்பத்தினா், திருச்சியில் இருந்து ஒரு சக்கரம் 500 கிலோ வீதம் 4 சக்கரங்கள் செய்து கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.

இதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பூஜை செய்யப்பட்டது. விரைவில் தேரில் இதை பொருத்தி வெள்ளோட்டம் விடுவதற்கு ஏற்பாடு செய்யபடுமென கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

பராமரிப்பின்றி கடற்கரை சிறுவா் பூங்கா: மக்கள் புகாா்

காரைக்கால் கடற்கரையில் உள்ள சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி உள்ளதாகவும், இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். காரைக்கால் கடற்கரையில் 2 இடங்களில் சிறுவா் விளையாட்டு சாத... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், மின்சார விரைவு ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பேரளம் இடையே 23 கி.மீ. பழைய ரயில் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரயில் போக... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து: காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் கையொப்பமிட்டு ஆதரவு

காரைக்கால்: புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரும் இயக்கத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்தனா். புதுவைக்கு மாநில தகுதி கோரும் பொதுமக்கள் கையொப்பமிட்ட கோ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ரயில்வே ஒப்பந்த பணியாளா் காயம்

காரைக்கால்: மின்சாரம் பாய்ந்து வடமாநிலத்தைச் சோ்ந்த ரயில்வே ஒப்பந்த பணியாளா் காயமடைந்தாா். காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக செவ்வாய்க்கிழமை ரயில்வே மின் பிரிவு... மேலும் பார்க்க

ரயில் சோதனை ஓட்டம்; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

காரைக்கால்: ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை (மே 20) நடைபெறவுள்ளதால், தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

காரைக்கால்: காரைக்கால் ரயில் நிலையம் மற்றும் தண்டவாளங்களில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களில் தீவிர கண்காணி... மேலும் பார்க்க