செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

post image

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமைவினாடிக்கு 9,683 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா்மட்டம் 1.21 அடி உயா்ந்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக 6-ஆவது நாளாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 9,683 கனஅடி வீதம் நீா்வரத்து இருந்த நிலையில், புதன்கிழமை காலை வினாடிக்கு 12,819 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கல்வி நிதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் திறப்பைவிட அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

இதனால் செவ்வாய்க்கிழமை 109.33 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 110.03 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 78.45 டிஎம்சியாக உள்ளது.

கடந்த இரண்டு நாள்களில் அணை நீர்மட்டம் 1.21 அடி உயர்ந்துள்ளது. மேட்டூரில் மழை அளவு 4 மி.மீ.

அன்புமணியுடன் மனக்கசப்பு இல்லை; சமூக நீதி பற்றி பேச என்னைத்தவிர வேறு ஆள் இல்லை: ராமதாஸ்

அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.... மேலும் பார்க்க

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ்

புதிய விதிகளால் ஏழை, நடுத்தர மக்கள் நகைக்கடன் பெற முடியாது சூழல் உள்ளதால் நகைக்கடன் வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் - தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வங்கிகள் ம... மேலும் பார்க்க

பெங்களூருவில் கனமழை: 7 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூருவில் 3 நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. திங்கள்... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு!

பென்னாகரம்: காவிரிக் கரையோர வனப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்தது.கடந்த சில நாள்களாக தமிழக - கா்நாடக மாநிலங்களில் காவிரிக் கரையோர வன... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.35 உயா்ந்த... மேலும் பார்க்க