செய்திகள் :

இளம் அதிரடி வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரை!

post image

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அழுத்ததிற்கு உள்ளாகாமல் எப்போதும்போல விளையாடுங்கள் எனக் கூறியுள்ளார்.

இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், பிரியான்ஷ் ஆர்யா என பல இளம் பேட்டர்கள் கவனம் ஈர்த்தார்கள்.

நேற்றிரவு (மே.20) தில்லியில் ராஜஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே 187 ரன்களை சேர்த்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியது.

போட்டிக்கு பிறகு தோனியிடம் இந்த சீசனில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்? எனக் கேள்வி கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு எம்.எஸ்.தோனி கூறியதாவது:

இதைச் செய்தால் பேட்டராக முன்னேறலாம் - தோனி

ஒரு சீசன் நன்றாக அமைந்துவிட்டால் அடுத்த சீசனில் பலரும் உங்களிடம் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். அந்தக் கூடுதல் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் முதல் சீசனில் எப்படி விளையாடினீர்களோ அதேபோல் விளையாடுங்கள். புதியதாக எதையும் முயற்சிக்காதீர்கள். மூத்த வீரர்கள், பயிற்சியாளர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

தொடர்ச்சியாக ஒரே மாதிரி ரன்களை குவிக்க முயற்சியுங்கள். 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும்போது இது கடினம்தான். ஆனால், அதற்காக அழுத்தம் அடைய வேண்டும்.

முக்கியமாக ஆட்டத்தை நன்கு கவனியுங்கள். தொடக்க வீரர் அல்லது டாப் ஆர்டர் பேட்டராக இருந்தால் போட்டியை முடித்துக்கொடுக்க முயற்சியுங்கள். அது உங்களை பேட்டராக முன்னேற்றும்.

இந்த சீசனில் நன்றாக விளையாடிய இளைஞர்களுக்கு இதுதான் எனது அறிவுரையாக இருக்கும் என்றார்.

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மதீஷா பதிரானா..! சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?

சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரானா தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியுள்ளார். 22 வயதாகும் இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரானா சிஎஸ்கே அணியில் 2022-இல் அறிமுகமானார்.... மேலும் பார்க்க

ஏலத் தொகையில் 31% அபராதமாக அளித்த திக்வேஷ் ரதி..!

லக்னௌ அணியின் சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதியின் மொத்த அபராதத் தொகை ரூ.9 லட்சத்தைக் கடந்துள்ளது. தில்லியைச் சேர்ந்த 25 வயதாகும் சுழல்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி ஐபிஎல் போட்டிகளில் லக்னௌ அணிக்காக வ... மேலும் பார்க்க

2 சீசனிலும் 10 தோல்விகள்: ஆர்சிபி, மும்பைக்கு அடுத்து சிஎஸ்கே!

ஐபிஎல் வரலாற்றின் மோசமான சாதனைகள் பட்டியலில் சிஎஸ்கே அணியும் இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் 5 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே தற்போது மோசமான சாதனைகளை நிக... மேலும் பார்க்க

தில்லி - மும்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுக.! - பிசிசிஐக்கு தில்லி உரிமையாளர் கடிதம்

தில்லி - மும்பை இடையிலான போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தில்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இ... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை சமன்செய்த நூர் அகமது!

ஐபிஎல் 2025 சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வீரருடன் சிஎஸ்கே வீரர் நூர் அகமது சமன்செய்துள்ளார். 20 வயதாகும் ஆப்கன் வீரர் சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் விளையாட... மேலும் பார்க்க

மும்பையை அச்சுறுத்தும் மழை: பிளே-ஆஃப் செல்லப்போவது யார்?

மும்பையில் பெய்துவரும் கனமழையால், இன்றிரவு(மே 21) நடைபெறும் ஐபிஎல் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், பொதுமக்கள் க... மேலும் பார்க்க