செய்திகள் :

குஜராத்: சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

post image

குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 674-இல் இருந்து 891 ஆக அதிகரித்துள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட சிங்கங்கள் எண்ணிக்கை தொடா்பான கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக மாநில முதல்வா் பூபேந்திர படேல் புதன்கிழமை கூறியதாவது:

குஜராத்தில் இதற்கு முன்பு 2020 ஜூலை மாதம் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அப்போது கிா் தேசிய பூங்கா பகுதியில் மட்டுமே 674 சிங்கங்கள் இருந்தன.

இந்நிலையில் தற்போதைய கணக்கெடுப்பில் 891 சிங்கங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 189 ஆண் சிங்கங்கள், 330 பெண் சிங்கங்கள், 140 இளம் சிங்கங்கள், 225 குட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கிா் காடுகளைத் தாண்டி சௌராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிங்கங்கள் உள்ளன. ஜூனாகத், அம்ரேலி மாவட்டங்களில் மட்டுமே கிா் காடுகள் உள்ளன. ஆனால், இப்போது அவற்றைத் தாண்டி மொத்தம் 11 மாவட்டங்களில் சிங்கங்கள் பரவி வாழ்ந்து வருகின்றன. கிா் தேசிய பூங்கா பகுதியில் 384 சிங்கங்கள் உள்ள. 507 புலிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மகிழ்ச்சி: ‘புராஜெக்ட் லயன்’ திட்டத்தின் மூலம் சிங்கங்களின் வாழ்வியலுக்கு உகந்த சூழல் உருவாக்கித் தந்து அவற்றை பாதுகாத்துள்ளோம். சிங்கங்கள் எண்ணிக்கை குறிப்பிட்டத்தக்க அளவு அதிகரிப்பது ஊக்கமளிக்கும் தகவலாக அமைந்துள்ளது’ என்று பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க