செய்திகள் :

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!

post image

வங்கதேச ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா் ஷேக் ஹசீனா அவரது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

இதையடுத்து இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார். தொடக்கத்தில் இடைக்கால அரசுக்கு அந்நாட்டின் ராணுவ தளபதி வேக்கர் உஸ் ஜமான் ஆதரவு அளித்து வந்தார்.

பின்னர், ராணுவ தளபதியை ஆலோசிக்காமல் இடைக்கால அரசின் தலைவர் சில முடிவுகள் எடுத்ததை தொடர்ந்து, இருதரப்பினருக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, கடந்த இரண்டு நாள்களாக உடனடியாக தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று ராணுவ தளபதி அழுத்தம் கொடுத்து வருகிறார். மேலும், தேர்தலை நடத்த பல்வேறு அதிகாரிகளும் ஆதரவளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், யூனுஸுக்கு எதிராக வங்கதேச தலைநகர் டக்காவில் தேசியவாத கட்சியும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றது.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் இடைக்கால அரசின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு முகமது யூனுஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் பரவின.

இதுகுறித்து ஒருங்கிணைந்த மாணவர் அமைப்பான தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் நித் இஸ்லாம் கூறுகையில், ”யூனுஸ் பதவி விலகுவதாக செய்திகள் பரவிய நிலையில் அவரை நேரில் சந்தித்து ஆலோசித்தேன். பணி செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடி நிலவுவதாகவும், அதனால் ராஜிநாமா குறித்து யோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளுக்குள் பொதுவான முடிவு எட்டப்படவில்லை என்றால் யூனுஸ் ராஜிநாமா செய்துவிடுவார் என்றும் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பார்கள் என்று நம்புவதாகவும் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!

ஹார்வர்டு மாணவர்களை அழைக்கும் ஹாங்காங்! டிரம்ப் அரசை விமர்சிக்கும் சீனா!

ஹார்வர்டு பல்கலைக்கழக விவகாரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசின் மீது சீன அரசு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது.அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்பதற்... மேலும் பார்க்க

காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்காது! இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தால் சர்ச்சை

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான் என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் கூறியது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.காஸா மீதான தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேலில் ... மேலும் பார்க்க

சீனா அசத்துகிறதா? அச்சுறுத்துகிறதா? உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை!

சீனாவில் ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.சீனாவில் ஹாங்சோ மாகாணத்தைச் சேர்ந்த ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனமான யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ், உலகில் முதன்முறையாக ரோபோ... மேலும் பார்க்க

ரஷியாவில் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி விமானம் தாமதம்!

ரஷியாவின் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் சென்ற விமானம் தாமதமாக தரையிறங்கியுள்ளது.ரஷியா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வ... மேலும் பார்க்க

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!

அமெரிக்க அரசுடன் ஏற்பட்டிருக்கும் மோதலைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களை சேர்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான அங்கீகாரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.இதனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற... மேலும் பார்க்க

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என... மேலும் பார்க்க