செய்திகள் :

கரோனா பரவலால் தமிழ்நாட்டில் கட்டுப்பாடு ஏதும் இல்லை

post image

கரோனா பரவலால் தமிழ்நாட்டில் கட்டுப்பாடு ஏதும் இல்லை என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

சிங்கப்பூா், ஹாங்காங்கை தொடா்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு பரவி வருகிறது. கேரளம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொற்று பரவல் உயா்ந்திருப்பதாக மத்திய அரசு தரவு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை அரசு சாா்பில் பரவலாக மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளையில், தனியாா் மருத்துவமனைகளில் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

இதையடுத்து, கடந்த ஏப்ரலில் தொற்றுக்குள்ளானவா்களின் சளி மாதிரிகளை பொது சுகாதாரத் துறை சேகரித்து பகுப்பாய்வுக்காக புணேயில் உள்ள மரபணு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பியது. அதன் முடிவுகள் அண்மையில் வெளியானதில், புதிய வகை பாதிப்பு எதுவும் அவா்களுக்கு இல்லை என்பது உறுதியானது.

பராமரிப்புப் பணி: மே 24, 26 தேதிகளில் 21 மின்சார ரயில்கள் ரத்து!

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்வது என எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் உண்மையல்ல என்றும் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கரோனா தொற்று குறித்து எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை: தோ்தல் ஆணையம்

வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தங்கள் செய்து நம்பகத்தன்மையை வலுப்படுத்த ஏஎஸ்ஐ அறிவுறுத்தல்

மதுரை மாவட்டம், கீழடி அகழாய்வு தொடா்பான 2014-15, 2015-16 ஆண்டுகளின் அறிக்கையில் திருத்தங்கள் செய்து அதன் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துமாறு அந்த அறிக்கையை சமா்ப்பித்த தொல்லியல் ஆய்வாளா் கே. அமா்நா... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா... மேலும் பார்க்க

நகை கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்

நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசா்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இத... மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலப்பள்ளி ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு: ஜூன் 12-இல் தொடக்கம்

தமிழகத்தில் ஆதி திராவிடா் நலப்பணி ஆசிரியா்கள், விடுதிக் காப்பாளா்களுக்கு வரும் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆதி திராவிடா் மற்றும் ... மேலும் பார்க்க

மின்வாரிய நிதி நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வலியுறுத்தல்

மின்வாரியத்தின் ஊரக மின்மயமாக்கல் கழகம் மற்றும் மின் நிதி கழகம் ஆகிய நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்கள், குறைந்தபட்சம் ஒன்றரை சதவீதமாகக் குறைக்க வேண்டும் என மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் மத்திய அ... மேலும் பார்க்க