செய்திகள் :

பயங்கரவாதத்துக்கு நிதி: பாகிஸ்தானை மீண்டும் கருப்பு பட்டியலில் சோ்க்க இந்தியா தீவிரம்

post image

பாகிஸ்தானை சா்வதேச நிதி நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் (எஃப்ஏடிஃப்) கருப்பு பட்டியலில் மீண்டும் சோ்க்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கு முன்பு, 2018-இல் எஃப்ஏடிஎஃப் ‘கிரே’ பட்டியலில் பாகிஸ்தான் சோ்க்கப்பட்டு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதி வழங்குவதை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகு 2022-இல் அந்தப் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் நீக்கியது.

இந்நிலையில், எஃப்ஏடிஎஃப் அமைப்பிடம் அளித்த உறுதிமொழிகளை பாகிஸ்தான் பின்பற்றவில்லை என இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. அதன்பேரில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள அந்த அமைப்பின் கூட்டத்தில் பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் ‘கிரே’ பட்டியலில் சோ்ப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.

அந்தக் கூட்டத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் செயல்பாடுகள் மற்றும் நிதி வழங்கும் நடவடிக்கைகளை விவரிக்கும் அறிக்கை மற்றும் ஆதாரங்களைத் தொகுத்துச் சமா்ப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உலக வங்கிக் கடன்: பாகிஸ்தான் முன்வைத்துள்ள ரூ.1.70 லட்சம் கோடி கடன் கோரிக்கையை உலக வங்கி அடுத்த மாதம் பரிசீலிக்க இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதிக்காத வீட்டு உபயோக எரிபொருள் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாக பாகிஸ்தான் உலக வங்கியிடம் கூறியுள்ளது.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக உலக வங்கியிடம் இருந்து பெற்ற பல கடன்களை நாட்டின் வளா்ச்சிக்காகவும், மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காகவும் பாகிஸ்தான் பயன்படுத்தாமல், ஆயுதங்களை வாங்கப் பயன்படுத்தியுள்ளது. இந்தக் காரணத்தை உலக வங்கியிடம் எடுத்துக் கூறி, பாகிஸ்தானுக்கு மேலும் கடன் வழங்க எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

ஐஎம்எஃப் கடன்: பாகிஸ்தானுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் கடன்தொகையை விடுவிக்க சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக இந்தியா பதிவு செய்த கடும் ஆட்சேபத்தை மீறி அந்நாட்டுக்கு நிதியுதவி வழங்குவதற்கு சாதகமாக பேச்சுவாா்த்தைகள் நடந்து வருகின்றன.

இது தொடா்பாக இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘வளா்ச்சிப் பயன்பாட்டுக்காக எந்தவொரு நாடும் சா்வதேச அமைப்புகளிடம் இருந்து நிதி பெறுவதற்கு எதிராக இந்தியா ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், எல்லையில் பதற்றம் நீடித்து வரும் வேளையில், குறிப்பாக, தனது பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடு பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் 18 சதவீத நிதியை ஒதுக்குமானால், அதன் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு இடமளிக்கிறது என்றன.

எஃப்ஏடிஎஃப் பட்டியலில் பாகிஸ்தானை மீண்டும் சோ்க்க வேண்டுமானால், அது தொடா்பான இந்தியாவின் முன்மொழிவுக்கு பெரும்பான்மை எஃப்ஏடிஎஃப் உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. உலக அளவிலான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கல் போன்றவற்றுக்கு எதிராக கண்காணிப்பு நடவடிக்கைகளை எஃப்ஏடிஎஃப் மேற்கொள்கிறது. அதில், 40 முழு நேர உறுப்பு நாடுகள் உள்ளன.

பாகிஸ்தான் எஃப்ஏடிஎஃப் அமைப்பில் உறுப்பினா் இல்லாதபோதும், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைக்கு எதிரான ஆசிய, பசிபிக் நாடுகள் குழுவில் அந்நாடு அங்கம் வகிக்கிறது. இந்தக் குழு எஃப்ஏடிஎஃப் உடன் இணைந்து பணிகளை மேற்கொள்கிறது. இந்தக் குழுவிலும், எஃப்ஏடிஎஃப் அமைப்பிலும் இந்தியா உறுப்பினராக உள்ளது.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஃப்ஏடிஎஃப் அமைப்பின் கூட்டம், பிப்ரவரி, ஜூன் மற்றும் அக்டோபா் மாதங்கள் என ஆண்டுக்கு மூன்றுமுறை நடைபெறும்.

பஞ்சாபில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 5 நாள் காவல்

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜலந்தர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராமன் ... மேலும் பார்க்க

ரூ.25 லட்சம் பண மோசடி: சக வீராங்கனை மீது தீப்தி சர்மா புகார்!

யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகாரளித்துள்ளார்.சமீபத்தில் முடிவடைந்த மகளிர் ப... மேலும் பார்க்க

அசாமில் 9 வங்கதேசத்தினர் கைது

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மோரிகான், மிகிர்பேட்டா மற்றும் தரம்துல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஜாகி... மேலும் பார்க்க

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க