செய்திகள் :

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

post image

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் ராகுல் காந்தி எழுப்பிய மூன்று கேள்விகளை அடுத்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

140 கோடி இந்தியர்களும் ஒற்றுமையாக நிற்கும் வேளையில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் சில சக்திகளின் மத்தியில், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் கௌரவம் குறித்து கேள்வி எழுப்புவது ராகுல் காந்தியின் வழக்கம் என அவர் கூறினார்.

பயங்கரவாதிகளையும் எதிரிகளையும் எதிர்கொள்ளும் கடுமையான காலங்களில் கூடவா இதுபோன்ற கேள்விகளை எழுப்புவது என்ன வகையான சித்தாந்தம்? நீங்களோ அல்லது நாங்களோ அதைப் புரிந்துகொள்ள முடியாது.

ராகுல் காந்தியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா 2018-இல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்துவிட்டதாக ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரை தாக்கிப் பேசினார்.

ராகுல் பேசியதில்.. இந்தியா ஏன் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டுள்ளது? பாகிஸ்தானைக் கண்டிப்பதில் ஒரு நாடு கூட எங்களை ஆதரிக்கவில்லை ஏன்? இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் டிரம்பிடம் சமரசம் செய்ய யார் கேட்டார்கள்? என்று ராகுல் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 5 நாள் காவல்

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜலந்தர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராமன் ... மேலும் பார்க்க

ரூ.25 லட்சம் பண மோசடி: சக வீராங்கனை மீது தீப்தி சர்மா புகார்!

யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகாரளித்துள்ளார்.சமீபத்தில் முடிவடைந்த மகளிர் ப... மேலும் பார்க்க

அசாமில் 9 வங்கதேசத்தினர் கைது

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மோரிகான், மிகிர்பேட்டா மற்றும் தரம்துல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஜாகி... மேலும் பார்க்க

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க