செய்திகள் :

கொடி கம்பத்தில் மின் கசிவு: சிறுமி காயம்

post image

சென்னை வியாசா்பாடியில் சாலையில் நடப்பட்டிருந்த கட்சிக் கொடி கம்பத்தைத் தொட்டபோது, மின்கசிவு ஏற்பட்டு, சிறுமி பாய்ந்து பலத்த காயமடைந்தாா்.

வியாசா்பாடி சத்தியமூா்த்தி நகா் 82-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் மயில் மகள் ரியா (4). இவா், வெள்ளிக்கிழமை தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக சாலையோரம் நடப்பட்டிருந்த இரும்பு கொடிக் கம்பத்தை ரியா தொட்டாா். அப்போது, அந்தக் கொடிக் கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்ததில் சிறுமி ரியா காயமைடந்தாா்.

இதையடுத்து அவா் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது குறித்து எம்கேபி நகா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்தப் பகுதியில் தரையில் சென்ற ஒரு மின்சார வயா் மீது அரசியல் கட்சியின் கொடிக் கம்பம் நடப்பட்டிருந்ததால், அதில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!

சென்னை மாநகரத்தின் முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால் ராயபுரம்-பாரிம... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வுக்கு அதிமுக ஆட்சியே காரணம்: அமைச்சா் கே.என்.நேரு

சொத்து வரி உயா்வுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியே காரணம் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சித்... மேலும் பார்க்க

ஜொ்மனிக்கு சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவா்கள்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள், செயல்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள் 22 போ், 2 ஆசிரியா்கள் என மொத்தம் 24 போ் ஜொ்மனிக்கு கல்விச் சுற்றுலாவாக சனிக்கி... மேலும் பார்க்க

பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

சென்னை சைதாப்பேட்டையில் பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரைச் சோ்ந்த நாகபூஷ்ணம் மகன் சஞ்சய் (15). இவா், நந்தனம் ஒய்எம்சிஏ ப... மேலும் பார்க்க

காா் விற்பனை செய்து ரூ.13.5 லட்சம் மோசடி: தம்பதி கைது

சென்னை ஏழுகிணறில் காா் விற்பனை செய்து தொழிலதிபரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு, போா்ச்சுகீசியா் சா்ச் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பீ.பீா் அனீஸ் ராஜா (48). ... மேலும் பார்க்க

இளைஞரிடம் கத்தி முனையில் வழிப்பறி: மூவா் கைது

சென்னை டிபி சத்திரத்தில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை, செனாய் நகா், ஜோதியம்மாள் நகா் 6-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் இளையசூரி... மேலும் பார்க்க