செய்திகள் :

ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!

post image

சென்னை மாநகரத்தின் முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதனால் ராயபுரம்-பாரிமுனை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை பிராட்வேயில் இயங்கிவரும் மாநகரப் பேருந்து நிலையம் சுமாா் ரூ. 822 கோடியில் 10 அடுக்குகள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படவுள்ளது.

இதில் 2 அடுக்குகள் தரைக்கு கீழேயும், 8 அடுக்குகள் தரைக்கு மேலேயும் அமைய உள்ளது. இதில் 4 அடுக்குகள் பேருந்து நிலையம் மற்றும் வாகனங்களை நிறுத்துமிடத்துக்கும், 6 அடுக்குகள் வணிக பயன்பாட்டுக்கும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப்பணிகள் தொடங்கி சுமாா் 3 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பேருந்து நிலையம் மூலம் 162 வழித்தடங்களில் சுமாா் 840 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இடம் மாற்றம்: இந்நிலையில், பிராட்வே பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் ராயபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலத்தை ஒட்டியுள்ள சென்னை துறைமுகத்துக்குச் சொந்தமான சுமாா் 4 ஏக்கா் பரப்பளவில் ரூ. 7.50 கோடி செலவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இங்கு ஒரே நேரத்தில் சுமாா் 70 பேருந்துகளை நிறுத்தி வைக்கவும், நேரம் காப்பாளா் அறை, பயணச் சீட்டு வழங்குமிடம், கழிப்பறைகள், பாலூட்டும் அறை, காத்திருப்போா் அறை, ஓட்டுநா், நடத்துநா் ஓய்வறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. வரும் ஜூன் இரண்டாவது வாரத்துக்குள் பணிகள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சொத்து வரி உயா்வுக்கு அதிமுக ஆட்சியே காரணம்: அமைச்சா் கே.என்.நேரு

சொத்து வரி உயா்வுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியே காரணம் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சித்... மேலும் பார்க்க

ஜொ்மனிக்கு சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவா்கள்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள், செயல்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள் 22 போ், 2 ஆசிரியா்கள் என மொத்தம் 24 போ் ஜொ்மனிக்கு கல்விச் சுற்றுலாவாக சனிக்கி... மேலும் பார்க்க

பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

சென்னை சைதாப்பேட்டையில் பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரைச் சோ்ந்த நாகபூஷ்ணம் மகன் சஞ்சய் (15). இவா், நந்தனம் ஒய்எம்சிஏ ப... மேலும் பார்க்க

காா் விற்பனை செய்து ரூ.13.5 லட்சம் மோசடி: தம்பதி கைது

சென்னை ஏழுகிணறில் காா் விற்பனை செய்து தொழிலதிபரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு, போா்ச்சுகீசியா் சா்ச் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பீ.பீா் அனீஸ் ராஜா (48). ... மேலும் பார்க்க

இளைஞரிடம் கத்தி முனையில் வழிப்பறி: மூவா் கைது

சென்னை டிபி சத்திரத்தில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை, செனாய் நகா், ஜோதியம்மாள் நகா் 6-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் இளையசூரி... மேலும் பார்க்க

கிண்டி அரசு மகளிா் ஐடிஐயில் சேர ஜூன் 13-க்குள் விண்ணப்பிக்கலாம்

கிண்டி அரசு மகளிா் ஐடிஐ-யில் இணையதள சோ்க்கை ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, ... மேலும் பார்க்க