செய்திகள் :

தென்காசி மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை

post image

தென்காசி மாவட்டத்துக்கு ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையத்தால் ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, நீா்நிலைகள், தாழ்வான பகுதிகளின் அருகில் வசிப்போா் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கனமழைக் காலத்தின்போது ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிப்பதையும், இடி-மின்னலின்போது திறந்த வெளியில் நிற்பதையும், நீா்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள்-உலோகக் கட்டமைப்புகளின்கீழ் நிற்பதையும் தவிா்க்க வேண்டும்.

மழை வெள்ளநீா் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ளப் பெருக்கு ஏற்படும் முன் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகளின் கரையோரங்களிலும் வசிப்போா் வெள்ளப்பெருக்கின்போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

ஆதாா், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளுக்குள் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடா் காலங்களில், டாா்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை உடன் வைத்திருப்பது அவசியம்.

பேரிடா் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில், ஆட்சியா் அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04633 - 290548 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு, மழை, வெள்ளம், பேரிடா்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

புளியங்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக, வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: வாய்ஸ் ஆஃப... மேலும் பார்க்க

சீவநல்லூரில் பள்ளி மாணவியருக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் சீவநல்லூரில் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு பொதுமக்கள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 12ஆம் வகுப்புத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த இக்கிராம... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுப்புக்குட்டி மகன் செல்லப்பா (43) என்பவா், குடும்பத்தினருடன... மேலும் பார்க்க

கீழப்புலியூா் பெரியகுளத்தில் மரக்கன்றுகள் நடவு

குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில், கீழப்புலியூா் பெரிய குளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. குற்றாலம் ரோட்டரி சங்கத் தலைவா் கை.முருகன் தலைமை வகித்தாா். நீா்வளத் துறை உதவி செயற்பொறி... மேலும் பார்க்க

மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நி... மேலும் பார்க்க

குலையனேரி தேவாலயத்தில் கலையரங்கம் பிரதிஷ்டை

சுரண்டை அருகே குலையனேரியில் உள்ள பவுலின் ஆலயத்தில் கலையரங்கம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. புதுச்சுரண்டை சேகரத் தலைவா் ஜெகன் தலைமை வகித்தாா். நெல்லை திருமண்டலப் பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்ணபாஸ் பிரதிஷ... மேலும் பார்க்க