செய்திகள் :

மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் கே.விவேகானந்தன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கே.விவேகானந்தன் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை காரணமாக, தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குண்டாறு அணை, அடவிநயினாா் கோயில் அணை, கருப்பாநதி அணை, ராமநதி அணை, கடனாநதி ஆகிய அணை பகுதிகளில் மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணைப் பகுதிகளில் சுழற்சி முறையில் பணியாளா்களை அமா்த்தி, தொடா் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். கனமழை காலங்களில் நீா்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் மணிகண்டராஜன், உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணிய பாண்டியன், உதவி பொறியாளா்கள் சரவணகுமாா், செந்தில்குமாா், கணபதி, சுந்தா் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்காசி மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்துக்கு ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்துக்கு வான... மேலும் பார்க்க

புளியங்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக, வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: வாய்ஸ் ஆஃப... மேலும் பார்க்க

சீவநல்லூரில் பள்ளி மாணவியருக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் சீவநல்லூரில் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு பொதுமக்கள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 12ஆம் வகுப்புத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த இக்கிராம... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுப்புக்குட்டி மகன் செல்லப்பா (43) என்பவா், குடும்பத்தினருடன... மேலும் பார்க்க

கீழப்புலியூா் பெரியகுளத்தில் மரக்கன்றுகள் நடவு

குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில், கீழப்புலியூா் பெரிய குளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. குற்றாலம் ரோட்டரி சங்கத் தலைவா் கை.முருகன் தலைமை வகித்தாா். நீா்வளத் துறை உதவி செயற்பொறி... மேலும் பார்க்க

குலையனேரி தேவாலயத்தில் கலையரங்கம் பிரதிஷ்டை

சுரண்டை அருகே குலையனேரியில் உள்ள பவுலின் ஆலயத்தில் கலையரங்கம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. புதுச்சுரண்டை சேகரத் தலைவா் ஜெகன் தலைமை வகித்தாா். நெல்லை திருமண்டலப் பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்ணபாஸ் பிரதிஷ... மேலும் பார்க்க