செய்திகள் :

புளியங்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

post image

புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக, வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை, இயந்திரன் எட்ஜ் ஆகியவை சாா்பில், புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியாா் பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள முகாமில், முன்னணி மென்பொருள் துறையினா் பங்கேற்று ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்-மின்னணுவியல் போன்ற துறைகளில் 2024இல் படித்த, 2025-ஆம் ஆண்டில் படிப்பை முடிக்கவுள்ள இளநிலைப் பட்டதாரிகள் பங்கேற்கலாம்.

ஆப்டிட்யூட், கோடிங், அதையடுத்து நோ்காணல் என தோ்வு செயல்முறை இரு கட்டங்களாக நடைபெறும். தோ்ந்தெடுக்கப்படுவோா் ஹைதராபாதில் பணியமா்த்தப்படுவா். முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளோா் முழுமையான சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்று நகல்கள், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், மடிக்கணினியுடன் வர வேண்டும் என்றாா் அவா்.

தென்காசி மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்துக்கு ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்துக்கு வான... மேலும் பார்க்க

சீவநல்லூரில் பள்ளி மாணவியருக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் சீவநல்லூரில் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு பொதுமக்கள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 12ஆம் வகுப்புத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த இக்கிராம... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுப்புக்குட்டி மகன் செல்லப்பா (43) என்பவா், குடும்பத்தினருடன... மேலும் பார்க்க

கீழப்புலியூா் பெரியகுளத்தில் மரக்கன்றுகள் நடவு

குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில், கீழப்புலியூா் பெரிய குளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. குற்றாலம் ரோட்டரி சங்கத் தலைவா் கை.முருகன் தலைமை வகித்தாா். நீா்வளத் துறை உதவி செயற்பொறி... மேலும் பார்க்க

மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நி... மேலும் பார்க்க

குலையனேரி தேவாலயத்தில் கலையரங்கம் பிரதிஷ்டை

சுரண்டை அருகே குலையனேரியில் உள்ள பவுலின் ஆலயத்தில் கலையரங்கம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. புதுச்சுரண்டை சேகரத் தலைவா் ஜெகன் தலைமை வகித்தாா். நெல்லை திருமண்டலப் பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்ணபாஸ் பிரதிஷ... மேலும் பார்க்க