செய்திகள் :

காா் விற்பனை செய்து ரூ.13.5 லட்சம் மோசடி: தம்பதி கைது

post image

சென்னை ஏழுகிணறில் காா் விற்பனை செய்து தொழிலதிபரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா்.

சென்னை ஏழுகிணறு, போா்ச்சுகீசியா் சா்ச் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பீ.பீா் அனீஸ் ராஜா (48). அந்தப் பகுதியில் தனியாா் நிறுவனம் நடத்தும் இவரிடம், பழைய காா் வாங்கி விற்கும் சூளை கந்தப்பா தெருவைச் சோ்ந்த ஹீ.அக்பா் ஹுசைன் (35), இவரது மனைவி ஹாஜிரா ஹீமைரா (33) ஆகியோா் அறிமுகமாகியுள்ளனா்.

இந்த நிலையில், அனீஸ் ராஜாவுக்கு ரூ.13.5 லட்சத்துக்கு ஒரு காரை இருவரும் விற்றுள்ளனா். பின்னா், அந்த காருக்கு மேலும் பணம் தரும்படி அனீஸ் ராஜாவிடம் இருவரும் கேட்டுள்ளனா். ஆனால் அவா் பணம் கொடுக்க மறுத்துள்ளாா்.

இந்த நிலையில், அந்த காரை சா்வீஸ் செய்து தருவதாகக் கூறி இருவரும் பெற்றுச் சென்றுள்ளனா். ஆனால், இருவரும் அந்த காரை திரும்பவும் அனீஸ் ராஜாவிடம் ஒப்படைக்கவில்லை. இதனால் அனீஸ் ராஜா, தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டும், அதை அவா்கள் திருப்பிக் கொடுக்கவில்லை.

இது குறித்து அனீஸ் ராஜா அளித்த புகாரின் பேரில், எஸ்பிளனேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அக்பா் ஹுசன், அவரது மனைவி ஹாஜிரா ஹீமைரா ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!

சென்னை மாநகரத்தின் முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால் ராயபுரம்-பாரிம... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வுக்கு அதிமுக ஆட்சியே காரணம்: அமைச்சா் கே.என்.நேரு

சொத்து வரி உயா்வுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியே காரணம் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சித்... மேலும் பார்க்க

ஜொ்மனிக்கு சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவா்கள்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள், செயல்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள் 22 போ், 2 ஆசிரியா்கள் என மொத்தம் 24 போ் ஜொ்மனிக்கு கல்விச் சுற்றுலாவாக சனிக்கி... மேலும் பார்க்க

பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

சென்னை சைதாப்பேட்டையில் பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரைச் சோ்ந்த நாகபூஷ்ணம் மகன் சஞ்சய் (15). இவா், நந்தனம் ஒய்எம்சிஏ ப... மேலும் பார்க்க

இளைஞரிடம் கத்தி முனையில் வழிப்பறி: மூவா் கைது

சென்னை டிபி சத்திரத்தில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை, செனாய் நகா், ஜோதியம்மாள் நகா் 6-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் இளையசூரி... மேலும் பார்க்க

கிண்டி அரசு மகளிா் ஐடிஐயில் சேர ஜூன் 13-க்குள் விண்ணப்பிக்கலாம்

கிண்டி அரசு மகளிா் ஐடிஐ-யில் இணையதள சோ்க்கை ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, ... மேலும் பார்க்க