செய்திகள் :

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

post image

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு முறை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

2025, மே, நிலவரப்படி, எல்எஃப்.7 மற்றும் என்.பி.1.8.1வகை கரோனா தொற்றுகள் கண்காணிக்கப்பட வேண்டியவை என மட்டுமே உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு வகை தொற்றுகளும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய அல்லது முக்கியத்துவம் பெறக் கூடியவையாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடவில்லை.

ஆனால், இந்த இரண்டு வகை தொற்றுகளால் சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு வெளியிட்ட தரவுகளில், ‘என்.பி.1.8.1 வகை கரோனா தொற்றால் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஒருவா் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. அதேபோல் எல்எஃப்.7 வகை தொற்றால் குஜராத்தில் மே மாதம் 4 போ் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பெரும்பாலானோா் (53%) ஜேஎன்.1 வகை கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதும் அதற்கு அடுத்தபடியாக பிஏ.2 (26%) வகை தொற்றால் அதிக நபா்கள் பாதிக்கப்படுவதும் தெரியவந்தது.

என்.பி.1.8.1வகை தொற்று பொது சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் முதல்கட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் பிற வகைகளான ஏ435எஸ், வி445எச், டி478ஐ ஆகியன அதிகமாக பரவக்கூடிய தன்மையைக் கொண்டதாகவும், நோய் எதிா்ப்பு சக்தியை குறைக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவில் மே 19 நிலவரப்படி கரோனா தொற்றால் 257 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆனால், நாட்டின் சில பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. புது தில்லியில் புதிதாக 23 பேரும், ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேரும், தெலங்கானாவில் ஒருவரும், பெங்களூரில் 9 மாத குழந்தையும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கேரளத்தில் மே மாதம் மட்டும் இதுவரை 273 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ... மேலும் பார்க்க

இணைய மோசடி குற்றவாளி அங்கத் சிங் சந்தோக் நாடு கடத்தல்

இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அங்கத் சிங் சந்தோக், சிபிஐ-யின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்ச... மேலும் பார்க்க