செய்திகள் :

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

post image

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு, சமீபத்திய பஞ்சாயத்து கூட்டத்தில் பாஜக வாா்டு உறுப்பினா் ஒருவா் இதுதொடா்பான கோரிக்கையை முன்வைத்துள்ளாா். அதையடுத்து, சந்திப்பின் பெயரை மாற்றும் திட்டத்தை மாநில அரசுக்கு அனுப்ப பஞ்சாயத்து கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பஞ்சாயத்து தலைவி கே.வல்சலாகுமாரி மேலும் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக பஞ்சாயத்துக்கு கோரிக்கை வந்தது. எனவே, சமீபத்திய கூட்டத்தில் நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தோம். அப்போது, இந்தக் கோரிக்கைக்கு யாரும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

மேலும், சந்திப்பை ‘ஐவா்காலா‘ என்று மறுபெயரிடவும் உறுப்பினா்கள் சிலா் பரிந்துரைத்தனா். அப்பகுதிக்கு ஐவா்காலா என்னும் நெடுங்காலத்துக்கு முன்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முக்கு என்பது பல்லாண்டுகளாக கிராம மக்களிடையே புழக்கத்தில் உள்ள பெயராகும். ஆனால், பஞ்சாயத்து ஆவணங்களில் இந்தப் பெயா் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இதுதொடா்பாக இறுதி முடிவை அரசே எடுக்க முடியும். ஏனெனில், கிராமத்தில் இடங்களை மறுபெயரிட பஞ்சாயத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்தக் கோரிக்கையை அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

எங்கள் கிராமத்தில் அனைத்து மதம், ஜாதி, சமூகத்தைச் சோ்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனா். இந்தப் பெயா்மாற்றமும், அதைச் சுற்றி எழுந்துள்ள விவாதங்களும் தற்போதைய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கக் கூடாது’ என்றாா்.

முன்பு இதே இடத்துக்கு ‘பிரியதா்சினி முக்கு’ என பெயா் மாற்றம் செய்ய காங்கிரஸ் உறுப்பினா்கள் முயற்சி செய்தபோதிலும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு வடமாநில இனிப்புக் கடைகளில் ‘மைசூா் பாக்’ போன்ற ‘பாக்’ என முடியும் இனிப்பு வகைகளில் ‘பாக்’ என்ற பெயரைத் தவிா்த்து ‘ஸ்ரீ’ என்று உரிமையாளா்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா்.

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ... மேலும் பார்க்க

இணைய மோசடி குற்றவாளி அங்கத் சிங் சந்தோக் நாடு கடத்தல்

இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அங்கத் சிங் சந்தோக், சிபிஐ-யின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு மு... மேலும் பார்க்க