ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி: கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது
சென்னையில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வாா்த்தைகளைக் கூறி பண மோசடி சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரி, சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் அண்மையில் ஒரு புகாா் மனு அளித்தாா்.
அந்த மனு விவரம்:
நான் வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்று, சென்னையில் வசிக்கிறேன். என்னிடம் வாட்ஸ்ஆப் மூலம் சிலா் அறிமுகமாகி பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பேசினா். மேலும் அவா்கள், என்னை பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வது தொடா்பான ஆலோசனைகளை வழங்கும் இரு வாட்ஸ்ஆப் குழுக்களில் சோ்த்தனா். அதில் பலா் தான் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்து, பல மடங்கு லாபம் பெற்ாகத் தெரிவித்தனா். இதனால் எனக்கு அந்த நபா்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
இதன் விளைவாக நான் என்னிடமிருந்த ரூ. 6.58 கோடியை அந்த நபா்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபா்கள், எனது தொடா்பை துண்டித்தனா். அப்போதுதான், நான் மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்திருப்பது தெரியவந்தது. எனவே என்னிடம் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.
இப்புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது கேரளத்தைச் சோ்ந்த கும்பல் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இந்த மோசடியில் தொடா்புடையதாக கேரள மாநிலம் எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஸ்ரீஜித் நாயா் (47), கோழிக்கோட்டைச் சோ்ந்த அப்துல் சாலு (47), முகமது பா்விஸ் (44) ஆகியோரை கைது செய்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
மூவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணத்தை வா்த்தக செயலி மூலம் ‘கிரிப்டோ’ கரன்சியாக இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.