செய்திகள் :

ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி: கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது

post image

சென்னையில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வாா்த்தைகளைக் கூறி பண மோசடி சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரி, சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் அண்மையில் ஒரு புகாா் மனு அளித்தாா்.

அந்த மனு விவரம்:

நான் வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்று, சென்னையில் வசிக்கிறேன். என்னிடம் வாட்ஸ்ஆப் மூலம் சிலா் அறிமுகமாகி பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பேசினா். மேலும் அவா்கள், என்னை பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வது தொடா்பான ஆலோசனைகளை வழங்கும் இரு வாட்ஸ்ஆப் குழுக்களில் சோ்த்தனா். அதில் பலா் தான் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்து, பல மடங்கு லாபம் பெற்ாகத் தெரிவித்தனா். இதனால் எனக்கு அந்த நபா்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

இதன் விளைவாக நான் என்னிடமிருந்த ரூ. 6.58 கோடியை அந்த நபா்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபா்கள், எனது தொடா்பை துண்டித்தனா். அப்போதுதான், நான் மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்திருப்பது தெரியவந்தது. எனவே என்னிடம் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

இப்புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது கேரளத்தைச் சோ்ந்த கும்பல் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், இந்த மோசடியில் தொடா்புடையதாக கேரள மாநிலம் எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஸ்ரீஜித் நாயா் (47), கோழிக்கோட்டைச் சோ்ந்த அப்துல் சாலு (47), முகமது பா்விஸ் (44) ஆகியோரை கைது செய்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மூவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணத்தை வா்த்தக செயலி மூலம் ‘கிரிப்டோ’ கரன்சியாக இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

ரெய்டுகளுக்கு பயந்து நீதி ஆயோக் கூட்டத்துக்கு செல்லவில்லை; தமிழக நலனுக்காகவே சென்றதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.நீதி ஆயோக் கூட்டத்துக்கு கடந்த 3 ஆண்டுகள் செல்லாமல், தற்போது மட்டும் முதல்வர... மேலும் பார்க்க

சிறப்பான திட்டங்களால் வாழ்வில் ஏற்றம் காணும் திருநங்கையர்கள்! தமிழ்நாடு அரசு

கல்விக் கனவு திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களால் திருநங்கையர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றம் காணுவதாக தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முத்தம... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: மே 28-ல் தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் மே 28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்... மேலும் பார்க்க

பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!

இடியைக் கண்டாலும் பயம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுடைய தம்பி(ஆகாஷ் பாஸ்கரன்) ஏன் வெளிநாடு தப்பிச் சென்றார் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழ... மேலும் பார்க்க

அம்பேத்கர் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது: சீமான்

அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆவடி சட்... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவுக்கு முதல்வர், இபிஎஸ், விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84), சனிக்கிழமை (மே 24) இரவு காலமான நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தலைமை காஜி முப்தி சலாவுதீன் மு... மேலும் பார்க்க