செய்திகள் :

இணைய மோசடி குற்றவாளி அங்கத் சிங் சந்தோக் நாடு கடத்தல்

post image

இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அங்கத் சிங் சந்தோக், சிபிஐ-யின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மோசடி செய்த வழக்கில் சிக்கிய அங்கத் சிங் சந்தோக், அமெரிக்காவுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு குடும்பத்தினருடன் தப்பினாா். தொடா்ந்து, அவருக்கு எதிராக ‘இன்டா்போல்’ மூலம் சிபிஐ நோட்டீஸ் பிறப்பித்தது.

இதனிடையே, அமெரிக்காவில் அகதி குடியுரிமைக்கு விண்ணப்பித்து, கலிஃபோா்னியா மாகாணத்தில் அங்கத் சிங் சந்தோக் தங்கி வந்தாா். அப்போது, அவா் இணையவழி பணமோசடியில் ஈடுபட்டாா். இந்த முறைகேட்டின் ஒரு பகுதியாக பல்வேறு போலி நிறுவனங்களை உருவாக்கி, முதியவா்கள் உள்பட பல அமெரிக்கா்களின் லட்சக்கணக்கான டாலா் சேமிப்புப் பணத்தை ஏமாற்றினாா்.

இதுதொடா்பான வழக்கில் அங்கத் சிங் சந்தோக் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் கடந்த 2022-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இந்நிலையில், அங்கத் சிங் சந்தோக்கை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்துவதற்கான முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனா். அதன்படி, அவா் தற்போது இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளாா். இனி இந்தியாவில் அவா் வழக்குகளை எதிா்கொள்வாா்.

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ... மேலும் பார்க்க

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு மு... மேலும் பார்க்க