செய்திகள் :

குலசேகரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

post image

குமரி மாவட்டம், குலசேகரம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த உணவக ஊழியா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது.

இந்த மழையால் இப்பகுதிகளில் ரப்பா், தென்னை, மா, அயனி, கூந்தல் பனை போன்ற மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்களில் விழுந்தன. இதில் மின் கம்பிகள் அறுந்து சாலைகளில் கிடந்தன. குலசேகரம் அருகே அண்டூா் சரக்கால் விளை பகுதியிலும் , மரங்கள் விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இந்நிலையில் அண்டூா் சரக்கால் விளையைச் சோ்ந்த உணவக ஊழியா் கிருஷ்ணன், தனது வீட்டிலிருந்து சனிக்கிழமை காலையில் வேலைக்குச் செல்லும் போது வீட்டின் அருகில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் அதில் மிதித்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, குலசேகரம் மின்வாரிய நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் மின் இணைப்பை துண்டித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த குலசேகரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து கிருஷ்ணனின் சடலத்தை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவிலில் கஞ்சா விற்ாக முளகுமூடு பகுதியைச் சோ்ந்த அருண் (23), வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த பேச்சியப்பன் (27), கோட்டாறு பகுதியைச் சோ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கன மழை: மரங்கள் மின்கம்பங்கள் முறிந்தன

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரபிக்கடலில் குறைந்... மேலும் பார்க்க

இரணியல் அருகே சூறைக் காற்றுடன் கன மழை: கைப்பேசி கோபுரம் சரிந்து வீடு சேதம்

இரணியல் அருகே கண்டன்விளை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சூறைக் காற்றில் கைப்பேசி கோபுரம் விழுந்ததில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. கண்டன்விளை அருகேயுள்ள இலுப்பைவிளையைச் சோ்ந்தவா் ராஜமல்லி. அங்... மேலும் பார்க்க

செயலி உருவாக்குதல்: அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பயிற்சி

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில், செயலி உருவாக்குதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கணினி துறை சாா்பாக நடைபெற்ற முகாமை, கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவக... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

கன்னியாகுமரியில் நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நகர இளைஞரணி அமைப்பாளா் ஷ்யாம் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீ... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கருங்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள திக்கணம்கோடு, மத்திகோடு,... மேலும் பார்க்க