செய்திகள் :

ஐபோன் மட்டுமில்லை; அனைத்துக்கும் வரிதான்! டிரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்!

post image

ஐபோன்களுக்கு வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருள்கள் அனைத்துக்கும் வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, டிரம்ப் தெரிவித்ததாவது, வரிவிதிப்பு என்பது ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டுமல்ல. இது நியாமமாக இருக்காது. சாம்சங் போன்ற எந்தவொரு நிறுவனத்துக்கும் இது பொருந்தும்.

அமெரிக்காவில் தொழிற்சாலை அமைத்தால் மட்டுமே அவர்களுக்கு வரி கிடையாது. இது, அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது மட்டுமே என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கையானது ஜூன் மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் முற்பட்ட நிலையில், அதனை தடுக்கும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டார்.

அதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கக் கூடாது என்று கூறினார்.

இந்த நிலையில், சாம்சங் நிறுவனத்துக்கும் அதே கோரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சனிக்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் குவெட்டாவை தளமாகக் கொண்ட செய்தித்தாள் ஒன்றில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

உக்ரைன் மீது ரஷிய தாக்குதல்கள்: 12 பேர் பலி

உக்ரைன் முழுவதும் ஒரே இரவில் ரஷிய நிகழ்த்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 12 பேர் பலியாகினர். கிவ்வின் மேற்கே உள்ள சைட்டோமைரில் மூன்று குழந்தைகளும், தெற்கு நகரமான மைகோலைவில் 70 வயதுடைய ஒருவர... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் குடியுரிமை கோரும் அமெரிக்கர்கள்! புது டிரண்ட்?

பிரிட்டனில் குடியுரிமை பெறுவதில் அமெரிக்கர் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.பிரிட்டனில், இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் இதுவரையில் இல்லாத வகையில், அதிகளவிலான அமெரிக்கர்... மேலும் பார்க்க

முகமது யூனுஸ் பதவி விலகமாட்டாா்!

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் பதவி விலகப் போவதில்லை என்று திட்டக்குழு ஆலோசகா் வஹிதுதீன் மஹ்முத் சனிக்கிழமை தெரிவித்தாா்.இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ராஜிநாமா ... மேலும் பார்க்க

‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்’

காஸா போரில் பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திவருவதாக அந்த நாட்டு வீரா்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளனா்.இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா்கள்... மேலும் பார்க்க

எக்ஸ் தளம் திடீரென முடங்கியது!

சமூக ஊடகமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் அவதி தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக புலம்பி வருகின்றனர். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இர... மேலும் பார்க்க