செய்திகள் :

உக்ரைன் மீது ரஷிய தாக்குதல்கள்: 12 பேர் பலி

post image

உக்ரைன் முழுவதும் ஒரே இரவில் ரஷிய நிகழ்த்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 12 பேர் பலியாகினர்.

கிவ்வின் மேற்கே உள்ள சைட்டோமைரில் மூன்று குழந்தைகளும், தெற்கு நகரமான மைகோலைவில் 70 வயதுடைய ஒருவரும் கொல்லப்பட்டதாக மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையே ஒரு பெரிய போர்க்கைதி பரிமாற்றம் நடந்தநிலையில் இந்த தாக்குதல்கள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சனிக்கிழமை ரஷியாவின் 45 குரூஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும், 266 ஆளில்லா வான்வழி வாகனங்களை செயலிழக்கச் செய்ததாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது. இதனிடையே சனிக்கிழமை இரவு நான்கு மணி நேர இடைவெளியில் மாஸ்கோ உள்பட பல ரஷிய பகுதிகளில் 95 உக்ரைன் ட்ரோன்களை வான் பாதுகாப்புப் பிரிவுகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

குறுகிய காலத்தில் நிறைவடைந்த புன்னகைப் பூவே தொடர்!

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, மே 15 ஆம் தேதியில் துருக்கியில் ரஷியா - உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முதன்முறையாக நேரடி பேச்சுவார்த்தையில் அண்மையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில், போர்க்கைதிகள் பரிமாற்றம் தவிர்த்து, மற்ற கோரிக்கைகள் எதுவும் எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தானில் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சனிக்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் குவெட்டாவை தளமாகக் கொண்ட செய்தித்தாள் ஒன்றில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

ஐபோன் மட்டுமில்லை; அனைத்துக்கும் வரிதான்! டிரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்!

ஐபோன்களுக்கு வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருள்கள் அனைத்துக்கும் வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, டிரம்ப் தெரிவித்ததாவ... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் குடியுரிமை கோரும் அமெரிக்கர்கள்! புது டிரண்ட்?

பிரிட்டனில் குடியுரிமை பெறுவதில் அமெரிக்கர் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.பிரிட்டனில், இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் இதுவரையில் இல்லாத வகையில், அதிகளவிலான அமெரிக்கர்... மேலும் பார்க்க

முகமது யூனுஸ் பதவி விலகமாட்டாா்!

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் பதவி விலகப் போவதில்லை என்று திட்டக்குழு ஆலோசகா் வஹிதுதீன் மஹ்முத் சனிக்கிழமை தெரிவித்தாா்.இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ராஜிநாமா ... மேலும் பார்க்க

‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்’

காஸா போரில் பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திவருவதாக அந்த நாட்டு வீரா்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளனா்.இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா்கள்... மேலும் பார்க்க

எக்ஸ் தளம் திடீரென முடங்கியது!

சமூக ஊடகமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் அவதி தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக புலம்பி வருகின்றனர். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இர... மேலும் பார்க்க