செய்திகள் :

பிரதமர் மோடி மே 26, 27 இல் குஜராத் பயணம்

post image

பிரதமர் நரேந்திர மோடி மே 26, 27 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்.

மே 26, 27 ஆகிய இரண்டு நாள்கள் குஜராத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, மே 26 ஆம் தேதி காலை 11.15 மணியளவில் தாஹோத் நகரில் ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். மின்சார ரயில் என்ஜின் ஒன்றையும் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.

பின்னர், தாஹோதில் சுமார் ரூ.24,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். வேராவல் - அகமதாபாத் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலையும், வல்சாத் - தாஹோத் நிலையங்களுக்கு இடையே விரைவு ரயிலையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். பாதை மாற்றப்பட்ட கட்டோசன்-கலோல் பிரிவையும் பிரதமர் திறந்து வைப்பதோடு, அதில் ஒரு சரக்கு ரயிலையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். பிரதமர் பொது நிகழ்ச்சியி ஒன்றில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல: விஜய்

பிற்பகல் மாலை 4 மணியளவில் புஜ் நகருக்கு செல்லும் மோடி, அங்கு ரூ.53,400 கோடிக்கும் மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகிறார்.

மே 27 ஆம் தேதி காலை 11 மணியளவில் காந்திநகருக்குச் செல்லும் பிரதமர் மோடி, 2005 ஆம் ஆண்டு நகர்ப்புற மேம்பாட்டின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், குஜராத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மாநில தூய்மையான காற்றுத் திட்டம் ஆகியவற்றுடன் நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டு 2025-ஐ தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 22 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்பு வீடுகளையும் பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். பொன்விழா முதல்வர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,300 கோடி நிதியை அவர் விடுவிக்கிறார்.

ஒரேநாளில் மேட்டூா் அணை பூங்காவில் கட்டணமாக ரூ.1,58,930 வசூல்

மேட்டூா்: மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் கட்டணமாக ரூ.1,58,930 வசூலிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48 ஆவது... மேலும் பார்க்க

இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

சேலம்: சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.சேலம் நெடுஞ... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவல் உதவி ஆய்வாளர் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் புறவழிச்சாலையில் மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.க... மேலும் பார்க்க

2025 சர்வதேச யோகா நாள்: மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு

புதுதில்லி: 2025 ஆம் ஆண்டு சர்வதேச யோகா நாளில் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வத்தையும் இளைஞர்கள் தலைமையிலான கண்டுபிடிப்புகளையும் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

புதுதில்லி: சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்த்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். மாதத்தின்... மேலும் பார்க்க

உதகையில் மரம் விழுந்து கேரள சிறுவன் பலி

உதகையில் கனமழை பெய்து வரும் நிலையில், மரம் முறிந்து விழுந்ததில் கேரளம் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஆதிதேவ்(15) பலியானார். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு மே 26, 27-ஆகிய த... மேலும் பார்க்க