செய்திகள் :

குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலம் 964 குழந்தைகள் மீட்பு!

post image

குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலம் இதுவரை 964 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமீபத்தில் பிகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் இயங்கிவந்த இசைக் குழுவில் இருந்து 17 சிறுமிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை 964 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகாரில் செயல்பட்டுவரும் உள்ளூர் இசைக்குழுவில், 18 வயது நிரம்பாத சிறுமிகள் ஆபாச நடனமாட கட்டாயப்படுத்தப்படுவதாக, தொண்டு நிறுவனம் ஒன்றிடமிருந்து வந்தத் தகவலைத் தொடர்ந்து இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிகாரின் மார்சாக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட சிறுமிகள் குழந்தைகள் நல வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மீட்கப்பட்ட சிறுமிகளில், 6 பேர் மார்சாக் பகுதியைச் சேர்ந்தவர்கள். 7 பேர் பானபூர், 4 பேர் இஸுவாபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் 2015, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் 2012, குழந்தைகளுக்கான கட்டாயம் மற்றும் இலவசக் கல்விச் சட்டம் 2009 ஆகியவற்றை குழந்தைகளின் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் உறுதி செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் பேசாதது ஏன்? காங்கிரஸ்

உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது: நீதி ஆயோக் செயல் அதிகாரி

புதுதில்லி: உலகின் 4 ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என நீதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தார். தில்லியில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், புவி ... மேலும் பார்க்க

தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் பேசாதது ஏன்? காங்கிரஸ்

நாட்டு மக்களின் தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசாதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார். உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளத... மேலும் பார்க்க

கேரளம்: சரக்குகளுடன் மூழ்கிய லைபீரிய கப்பல்- 24 பேர் மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கந்தக எரிபொருள் ஏற்றிக்கொண்டு கொச்சி சென்று கொண்டிருந்த லைபீரிய சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கிய நிலையில், நல்வாய்... மேலும் பார்க்க

லாலுவின் மூத்த மகன் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்: என்ன காரணம்?

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியிலிருந்து அதிரடி நீக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை ம... மேலும் பார்க்க

4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குஜராத்தில் காடி, விசாவ... மேலும் பார்க்க

மழைக்கு இடிந்து விழுந்த காவல் அலுவலகம்: உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காவலர் பலி

காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மழைக்கு உதவி காவல் ஆணையர் அங்கூர் விஹார் லோனி அலுவலகத்தின் கூரை திடீரென இடிந்த... மேலும் பார்க்க