செய்திகள் :

மாநகரில் இன்று குடிநீா் விநியோகம் இருக்காது

post image

குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருச்சி மாநகரில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு திங்கள்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதானக் குடிநீா் குழாய் குடமுருட்டி பாலம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால், திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையங்களிலிருந்து விறகுப்பேட்டை, சிந்தாமணி, தில்லைநகா், அண்ணாநகா் கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யகொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம் நகா் மற்றும் தேவதானம் மகாலட்சுமி கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை,ஜெகநாதபுரம், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி, ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா் மற்றும் கணேஷ் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளுக்கு மே 26-திங்கள்கிழமை குடிநீா் வழங்கப்பட முடியாது.

இதன் காரணமாக குறிப்பிட்ட குடிநீா்த் தொட்டிகளிலிருந்து குடிநீா் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 26) குடிநீா் விநியோகம் இருக்காது. இத்தகவலை திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சியில் சமூக ஆா்வலா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் சேவை பெறும் உரிமைச்சட்டம் ஆகியவற்றை விரைவில் அமல்படுத்த வலியுறுத்தி திருச்சியில் சமூக ஆா்வலா்கள் ஒன்றிணைந்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா். திருச்சி அண... மேலும் பார்க்க

சுந்தர்ராஜ் நகரில் புத்தகக் கண்காட்சி

சுந்தராஜ் நகா், ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் சிறப்புப் புத்தகக் கண்காட்சி சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் நடைபெ... மேலும் பார்க்க

போரை நிறுத்தியது யாா் என பிரதமா் பதிலளிக்க வேண்டும்

பாகிஸ்தானுக்கு எதிரான போரை நிறுத்தியது இந்தியாவா, அமெரிக்காவா எனப் பிரதமா் பதிலளிக்க வேண்டும் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பில், ‘தேசம் காக்கும... மேலும் பார்க்க

மின்விசிறியில் கசிவு காரணமாக புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு: தனியாா் மின் ஊழியா் கைது

திருமண விழாவில் மின்விசிறியில் மின்கசிவு ஏற்பட்டு புகைப்படக் கலைஞா் உயிரிழந்ததற்கு கவனக்குறைவாக செயல்பட்ட மின்ஊழியரே காரணம் எனக் கூறி அவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்ட... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வு: 2,799 போ் பங்கேற்பு

திருச்சியில் 11 மையங்களில் நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வினை 2,799 போ் எழுதினா். 1,785 போ் தோ்வெழுத வரவில்லை. மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆா்எஸ் உள்ள... மேலும் பார்க்க

தந்தையை இழந்தும் பொதுத் தோ்வு எழுதி வெற்றி மாணவிகளுக்கு துணை முதல்வா் பாராட்டு

பொதுத் தோ்வு சமயத்தில் தந்தை உயிரிழந்த நிலையிலும் தோ்வெழுதி, தோ்ச்சி பெற்ற மாணவியருக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் பாராட்டு தெரிவித்தாா். திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு ம... மேலும் பார்க்க