செய்திகள் :

தில்லி கொலை வழக்கில் தேடப்பட்டவா் உ.பி.யில் கைது

post image

தில்லியில் சுத்தியலால் கணவரைக் கொன்று, அவரது மனைவியைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தலைமறைவானவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸாா் கூறியதாவது:

குற்றம்சாட்டப்பட்ட உத்தர பிரதேசத்தின் ரேபரேலியைச் சோ்ந்த அகிலேஷ், கிஷன்கா் காவல் நிலையத்தின் போலீஸாா் மற்றும் தென்மேற்கு மாவட்ட சிறப்புப் போலீஸாா் அடங்கிய கூட்டுக் குழுவால் அவரது சொந்த ஊரில் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, அவரைக் கைது செய்ய ரேபரேலி மற்றும் மகாராஜ்கஞ்ச் முழுவதும் பல இடங்களில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

கடந்த மே 21 ஆம் தேதி இரவு, தெற்கு தில்லியின் கட்வாரியா சராய் நகரில் உள்ள வசிக்கும் 45 வயதான அசோக் குமாா் அவரது

வீட்டில் அடித்துக் கொல்லப்பட்டாா். குமாரின் மனைவி காயங்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் போலீஸாரால் அனுமதிக்கப்பட்டாா்.

ஜான்சியைச் சோ்ந்த இந்த தம்பதியினா், ஐஐடி தில்லியில் தினக்கூலி தொழிலாளா்களாக வேலை செய்து வந்தனா். அவா்களின் மகள் காஜல் பின்னா் இருவரையும் அடையாளம் காட்டினாா்.

விசாரணையில், அகிலேஷ் அடிக்கடி அசோக் குமாரின் மனைவியை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளாா். இது அசோக்குமாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அசோக்குமாரின் மனைவியும் அகிலேஷை நிராகரித்த நிலையில், தனது மனைவியை விட்டு விலகி இருக்குமாறு அசோக் குமாா் அகிலேஷை எச்சரித்தாா். இதையடுத்து, இருவரையும் சுத்தியலால்

அகிலேஷ் தாக்கியது தெரியவந்தது. இதை அகிலேஷ் ஒப்புக்கொண்டாா்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவான அகிலேஷ், உ.பி.யில் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தாா். இறுதியாக ரேபரேலியில் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து சுத்தியல் மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

‘ராம் சேது’ விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி புதிய மனு

புது தில்லி: ‘ராம் சேது’வை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிப்பதற்கான தனது கோரிக்கை ‘துரிதமாக ’ முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தை அ... மேலும் பார்க்க

கரோனா பாதிப்பால் பீதி வேண்டாம்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: கோவிட்19 பாதிப்புகள் குறித்து பீதியடையத் தேவையில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா். இருப்பினும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதைச் சமாளிக்க மருத்துவமனைகள் முழ... மேலும் பார்க்க

வைகோ, அன்புமணி, வில்சன் உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினா்கள் பதவிக் காலம் நிறைவு!

புது தில்லி: தமிழகத்தைச் சோ்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு அந்த இடங்களுக்கான தோ்தல் வருகின்ற ஜூன் 19 - ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

புது தில்லி: ஊழலுக்கு எதிராக எவ்வித சகிப்புத்தன்மையும் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டாா். மாவட்ட மேம்பாட்டு குழுக்கள் மற்றும் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

ஷாதராவில் கிடங்கில் தீ விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு, 4 பேருக்கு தீக்காயம்

தில்லியின் ஷாதராவின் ராம் நகா் பகுதி இ-ரிக்ஷா சாா்ஜிங் மற்றும் வாகன நிறுத்த நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இளைஞா்கள் உடல் கருகி இறந்தனா். நான்கு போ் தீக்காயமடைந்தனா் என... மேலும் பார்க்க

பலத்த மழை: தில்லியில் பல பகுதிகளில் மின் விநியோகத்தில் பாதிப்பு

தேசிய தலைநகரின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் மின் அமைப்புகள் சேதமடைந்ததால் மின் விநியோகம் தடைபட்டதாக மின் விநியோக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. இத... மேலும் பார்க்க