செய்திகள் :

சூடானில் பரவிய புதிய வகை காலரா தொற்றுக்கு 170 பேர் பலி!

post image

சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூடானில் ஒரு புதிய காலரா நோய்த்தொற்று காரணமாக கடந்த வாரத்தில் மாட்டும் 172 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்தத் தொற்று காரணமாக 2,500-க்கும் மேற்பட்டவர்களை நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

தண்ணீரால் பரவும் இந்த காலரா நோய் மிகவும் வேகமாக தொற்றக்கூடிய நிலையில் அதீத வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி உயிரையே எடுக்கக்கூடியது. இது கடுமையான நீரிழப்புக்கு வழிவகுத்து, சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் சில மணி நேரங்களுக்குள் மரணத்தையும் ஏற்படுத்தும்.

தலைநகரான கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், வடக்கு கோர்டோஃபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூடானின் சுகாதார அமைச்சர் ஹைதம் இப்ராஹிம் கூறுகையில், “கடந்த நான்கு வாரங்களில் கார்ட்டூம் பகுதியில் சராசரியாக 600 முதல் 700 வரை காலரா நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாகத்” தெரிவித்தார்.

சூடானில் ராணுவத்தினருக்கும் துணை ஆயுதக்குழுக்களுக்கும் இடையே நீண்ட காலமாக சண்டை நீடித்து வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டை காரணமாக இதுவரை குறைந்தபட்சம் 20,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: இறக்குமதியாகும் விநாயகர் சிலைகள்... சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்!

ரஷியா வசம் மேலும் 4 உக்ரைன் கிராமங்கள்

மேலும் நான்கு உக்ரைன் எல்லை கிராமங்கள் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளன. உக்ரைனுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்ட மறுநாள் சுமி பிராந்தியத்தில் இந்த க... மேலும் பார்க்க

இலங்கை: வடக்கு மாகாண தமிழா் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் வாபஸ்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழா்களின் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் அறிவிக்கையை அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது. கடந்த மாா்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்... மேலும் பார்க்க

நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியதற்காக ரஷ்ய... மேலும் பார்க்க

73 ஆண்டு கால தடை.. மது விலக்கை நீக்குகிறதா சவூதி அரேபியா?

மிகப் பாரம்பரியமான நடைமுறைகளைக் கட்டுக்கோப்பாகப் பின்பற்றி வரும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவில், கடந்த 73 ஆண்டு காலமாக இருக்கும் மது விலக்கு ரத்து செய்யப்படவிருப்பதாகத் தகவல... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தால் விசா ரத்து!

அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்று அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

மனைவியிடம் அடி வாங்கிய பிரான்ஸ் அதிபர்? விமானத்தில் பரபரப்பு!

பிரான்ஸ் அதிபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே விமானத்தை விட்டுக் கீழே இறங்கும்போது சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, செல்போனில் படம்பிடிக்கப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு... மேலும் பார்க்க