செய்திகள் :

நீதிமன்ற வளாகத்தில் மோதல்: இருவா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தபோது, மோதலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்புவனம் அருகேயுள்ள தேளி கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்மணி (52). இவரது மைத்துனா் பாக்கியராஜ் (40). இவா்களுக்குள் ஏற்கெனவே குடும்பப் பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டது தொடா்பாக பூவந்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக பொன்மணி, பாக்கியராஜ் ஆகிய இருவரும் திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தனா். அப்போது இவா்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இது குறித்து நீதிமன்ற தலைமை எழுத்தா் சுகுமாறன் அளித்த புகாரின் பேரில், திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

போக்சோ வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கருவூல ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை அரசு அலுவலா்கள் குடியிருப்பில... மேலும் பார்க்க

கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா். கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, க... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1-இல் தொடக்கம்!

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் மே 31 அன்று மாலை 6 மண... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த மு. வெற்ற... மேலும் பார்க்க

தாா்ச்சாலை அமைக்கும் பணிகள்: மேயா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் நடைபெற்று வரும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயா் சே.முத்துத்துரை அதிகாரிகளுடன் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தாா். டாரிப் ஷோ் 2024-2025 ஆ... மேலும் பார்க்க