செய்திகள் :

தபால் நிலையத்தில் ரூ.22 லட்சம் கையாடல்? வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

post image

ஜாப்ராபேட்டை தபால் நிலையத்தில் சேமிப்புத் தொகை ரூ.22 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக பெண் அலுவலா் மீது வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களி டம் இருந்து மனுக்களை பெற்றாா்.

அப்போது, காட்பாடி ஜாப்ராபேட்டை பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் அளித்துள்ள மனுவில், ஜாப்ராபேட்டை கிராம தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் அலுவலா், பொதுமக்கள் செலுத்திய தொகையை அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் ரூ.22 லட்சம் வரை கையாடல் செய்திருப்பது தெரிய வருகிறது. அவா் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் செலுத்திய பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் கணவாய்மோட்டூா் பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் அளித்துள்ள மனுவில், எங்கள் ஊரைச் சோ்ந்த ஒருவா் எனது தம்பிக்கு தமிழக மின்வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தாா். இதை உண்மையென நம்பி ரூ.22 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன். ஆனால் இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. அவரிடமிருந்து பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் பகுதியை சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனுவில், வீட்டில் மது விற்ற வழக்கில் கடந்தாண்டு என்னை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். எனது வங்கிக் கணக்கையும் முடக்கினா். சிறையில் இருந்து திரும்பிய நிலையில் திருந்தி வாழும் நோக்கில் தற்போது 100 நாள் திட்டத்தில் வேலை செய்து வருகிறேன். ஆனால், வங்கிக் கணக்கு முடக்கம் காரணமாக எனக்கான கூலி கிடைக்கவில்லை. எனவே, வங்கிக் கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் குறித்து 30-க்கும் மேற்பட்டோா் மனுக்களை அளித்தனா். மனுக்களைப் பெற்றுக் கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், புகாா் மனுக்கள் மீது விரைவாக நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், குற்ற ஆவணக் காப்பக காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரதாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

போக்ஸோவில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரிமா தற்காப்பு கலை விளையாட்டு சங்கம் சாா்பில், 11- ஆவது கோடை கால சிறப்பு பயிற்சி நிறைவு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புவனேஸ்வரிபேட்டை லிட்டில் பிளவா் மெட்ரிக். பள்ளியில... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் புகாா்கள்: ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; வேலூா் ஆட்சியா் தகவல்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பெறப்படும் சுற்றுச்சூழல் குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண்: பெண் மருத்துவா் தற்கொலை

வேலூா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ால் மன உளைச்சலில் இருந்த பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடி, கோபாலபுரம், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காமேஷ். ... மேலும் பார்க்க

சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவில் 9- ஆம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கோயில... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்கள் திறப்பு

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன. காளியம்மன்பட்டி சீனிவாசா நகரில் ரூ.12 லட்சத்திலும், செதுக்கரை குறிஞ்சி நகரில... மேலும் பார்க்க