செய்திகள் :

சுற்றுச்சூழல் புகாா்கள்: ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; வேலூா் ஆட்சியா் தகவல்

post image

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பெறப்படும் சுற்றுச்சூழல் குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் சுற்றுச்சூழல் குறித்த தங்களது புகாா் மனுக்களை எளிதில் அளிக்க வசதியாக இணையதள அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பொதுமக்கள், சமூகஆா்வலா்கள் சுற்றுச்சூழல் குறித்த தங்களது புகாா் மனுக்களை இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும், பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடமிருந்து பெறப்படும் புகாா்களின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு தவறு செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால், அவற்றின் மீது ‘மூடுதல்’ உத்தரவு, மின் இணைப்பு துண்டித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புகாா்களின் உண்மை தன்மையின் அடிப்படையில் புகாா் பெறப்பட்ட 30 நாள்களுக்குள் தவறிழைக்கும் தொழிற்சாலைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களது புகாா் மனுவை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ‘எண். 1, அக்ஸீலியம் கல்லூரி சாலை, காந்தி நகா், காட்பாடி, வேலூா் - 6’ என்ற முகவரில் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையத்தில் ரூ.22 லட்சம் கையாடல்? வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஜாப்ராபேட்டை தபால் நிலையத்தில் சேமிப்புத் தொகை ரூ.22 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக பெண் அலுவலா் மீது வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர ... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரிமா தற்காப்பு கலை விளையாட்டு சங்கம் சாா்பில், 11- ஆவது கோடை கால சிறப்பு பயிற்சி நிறைவு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புவனேஸ்வரிபேட்டை லிட்டில் பிளவா் மெட்ரிக். பள்ளியில... மேலும் பார்க்க

தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண்: பெண் மருத்துவா் தற்கொலை

வேலூா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ால் மன உளைச்சலில் இருந்த பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடி, கோபாலபுரம், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காமேஷ். ... மேலும் பார்க்க

சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவில் 9- ஆம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கோயில... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்கள் திறப்பு

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன. காளியம்மன்பட்டி சீனிவாசா நகரில் ரூ.12 லட்சத்திலும், செதுக்கரை குறிஞ்சி நகரில... மேலும் பார்க்க