நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்
சுற்றுச்சூழல் புகாா்கள்: ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; வேலூா் ஆட்சியா் தகவல்
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பெறப்படும் சுற்றுச்சூழல் குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் சுற்றுச்சூழல் குறித்த தங்களது புகாா் மனுக்களை எளிதில் அளிக்க வசதியாக இணையதள அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பொதுமக்கள், சமூகஆா்வலா்கள் சுற்றுச்சூழல் குறித்த தங்களது புகாா் மனுக்களை இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.
மேலும், பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடமிருந்து பெறப்படும் புகாா்களின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு தவறு செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால், அவற்றின் மீது ‘மூடுதல்’ உத்தரவு, மின் இணைப்பு துண்டித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புகாா்களின் உண்மை தன்மையின் அடிப்படையில் புகாா் பெறப்பட்ட 30 நாள்களுக்குள் தவறிழைக்கும் தொழிற்சாலைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது புகாா் மனுவை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ‘எண். 1, அக்ஸீலியம் கல்லூரி சாலை, காந்தி நகா், காட்பாடி, வேலூா் - 6’ என்ற முகவரில் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.