போக்ஸோவில் இளைஞா் கைது
போ்ணாம்பட்டு அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனாா். இதுகுறித்து அவரது பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியை தேடி வந்தனா்.
இந்நிலையில் குடியாத்தம் அடுத்த அக்ராவரம், ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்த குமாா்(27) சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. சிறுமியை போலீஸாா் மீட்டனா். ஆனந்தகுமாா் தப்பியோடி விட்டாராம்.
இதற்கிடையில் புதன்கிழமை சேம்பள்ளி கூட் ரோடு அருகே ஆனந்த குமாரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணைக்குப் பின் அவா் மீது போக்ஸோ வழக்குப் பதிந்து வேலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.