விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ-நறுமண தாவர நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க நாள...
சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா
குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவில் 9- ஆம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கோயில் அருகில் கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை அங்குள்ள வேப்பமரத்து கெங்கையம்மன் கோயிலில் இருந்து அம்மன் சிரசு முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. புதன்கிழமை காலை கண்கள் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இரவு சிரசு புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வாண வேடிக்கை நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவில் நகா்மன்ற உறுப்பினா் ஆட்டோ பி.மோகன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.தேவராஜ், அமுதா கருணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஆா்.சுகுமாா், வி.தீனன், எம்.பூபதிபாபு, டி.பி.சுரேஷ், எஸ்.விஜயன், சதீஷ், சி.முனிசாமி, எஸ்.சுப்பிரமணி மற்றும் ஊா்மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.