செய்திகள் :

பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள்: விஜய்

post image

அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி கல்வி விருது வழங்கும் நடைபெற்று வருகின்றது.

இந்த விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளிப்பதற்கு முன்னதாக விஜய் பேசியதாவது:

”சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்து. படிப்பில் சாதிக்க வேண்டும் என்பதை மறுக்கவில்லை. ஒரே விஷயத்தை யோசித்து, ஒரே படிப்பை படிக்க வேண்டும் என்று எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள். நீட் மட்டுமே உலகம் அல்ல, அதனை கடந்து உலகம் மிகப்பெரியது. சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

மனதை பலமாகவும் ஜனநாயகமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். ஜனநாயகம் இருந்தால்தான் உலகத்தின் அனைத்து துறைகளும் சமமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களை முதலில் ஜனநாயகக் கடமையை முறையாக செய்ய சொல்லுங்கள். நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், ஊழல் செய்யாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிக்கும் கலாசாரத்தை முறியடியுங்கள். அடுத்தாண்டு தேர்தலில் வண்டிவண்டியாக பணத்தை கொட்ட போகிறார்கள். அது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான். என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும்.

எவ்வளவு தடை வந்தாலும் அவர்களுக்கு பிடித்த துறைகளில் சாதிப்பார்கள், அதனால் பெற்றோர்கள் மாணவர்களின் விருப்பத்தை தெரிந்து வழிநடத்துங்கள்.

சாதி, மதத்தை வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கம் போகாதீர்கள். விவசாயிகள், தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்து உற்பத்தி செய்யவில்லை. போதைப் பொருளை போன்று சாதி, மதத்தை தூரமாக ஒதுக்கி வைத்துவிடுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது.

தந்தை பெரியாருக்கு சாதி சாயம் பூசுகிறார்கள். மத்திய அரசு தேர்வில் சாதி சார்ந்த கேள்வி வருகிறது. இதெல்லாம் வன்மையாக கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி

சென்னை: பாமக அலுவலக முகவரியை கட்சித் தலைவர் அன்புமணி மாற்றியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது, பாமகவில், கட்சி நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு வெடித்து விஸ்வரூபம் எடுத்த... மேலும் பார்க்க

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்; பொது இடங்களிலும் அவசியம்: கேரள முதல்வர்

கரோனா பரவலைத் தடுக்க மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்றும் பொது இடங்களிலும் பயணத்தின்போதும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில்... மேலும் பார்க்க

அகில இந்திய வானொலியில் இரவு நேரங்களில் ஒலிபரப்பாகும் ஹிந்திப் பாடல்கள்!

சென்னை: அகில இந்திய வானொலியில், இரவு நேரங்களில் வழக்கமான தமிழ்த் திரைப்பட மெல்லிசைப் பாடல்கள் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டு, இரவு 11 மணிக்கு மேல் ஹிந்திப் பாடல்கள் இசைக்கப்படுவது குறித்து நேயர்கள் கடு... மேலும் பார்க்க

பாமக விரிசலுக்கு நானா காரணம்? கண்ணீர் விட்டு அழுதேன்: ஜி.கே. மணி

விழுப்புரம்: பாமகவில் ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் இன்று ராம... மேலும் பார்க்க

நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ்(75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசா... மேலும் பார்க்க