செய்திகள் :

தில்லியில் கரோனாவுக்கு முதல்முறையாக ஒருவர் பலி!

post image

புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான 60 வயது பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக, அம்மாநில அதிகாரிகள் இன்று (மே 31) தெரிவித்துள்ளனர்.

இந்தப் புதிய பரவலில், தில்லியில் முதல்முறையாக கரோனா பாதிப்புக்குள்ளான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அம்மாநிலத்தில் தற்போது 294 பேர் கரோனா பாதிப்புக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஆனால், அந்தப் பெண் குடல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு லபாரோடோமி சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், அவருக்கு தற்செயலாகவே கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, நாடு முழுவதும் ஒரே நாளில் 511 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தற்போது சிகிச்சைப் பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்; பொது இடங்களிலும் அவசியம்: கேரள முதல்வர்

4000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்புகள்! கர்நாடகத்தில் இருவர் பலி!

கர்நாடகத்தில் கரோனா நோய்த் தொற்றால் இருவர் பரிதாபமாக பலியாகினர்.மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,700-ஐத் தாண்டியுள்ளது. ... மேலும் பார்க்க

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க