செய்திகள் :

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

post image

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், “அடுத்தாண்டுக்குள் மமதா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்படும். மமதா பானர்ஜியின் முதல்வருக்கான பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டுக்குள் முடிவடையப் போகிறது.

இந்திய ஆயுதப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மமதா பானர்ஜி ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் இந்தியாவில் உள்ள பல்வேறு தாய்மார்கள் மற்றும் பெண்களின் உணர்வுகளை அவமதித்துள்ளார்.

நீங்கள் இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்க்கவில்லை. கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கையுடன் விளையாடியுள்ளீர்கள். மேற்கு வங்க பெண்கள், வரவிருக்கும் தேர்தல்களில், ஆபரேஷன் சிந்தூரை எதிர்ப்பவர்களுக்கு, செந்தூரத்தின் மதிப்பை விளக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க வந்துள்ளேன்.

பயங்கரவாதிகளின் மரணம் மமதாவுக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. முஸ்லீம்கள் வாக்கு வங்கியைப் பெறுவதற்காகவே மமதா பானர்ஜி ஆபரேஷன் சிந்தூருக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்” என்றார் அமித் ஷா.

இதையும் படிக்க: எந்த அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: முதல்வர் ஸ்டாலின் உறுதி

195 நாட்டுப் பெண்கள் பாடிய கின்னஸ் சாதனைப் பாடல்: இந்தியா சாா்பில் சமையல் கலைஞா் அஸ்மா கான் குரல்

புது தில்லி: உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த ‘195’ பாடலில் இந்தியா சாா்பில் பிரபல பெண் சமையல் கலைஞா் அஸ்மா கானின் குரலும் இடம்பெற்றுள்ளது. பாலின சமத்து... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

2026-க்குள் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பு முழுமையாக விநியோகம்: ரஷியா

புது தில்லி: 2026-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் செய்யப்படும் என இந்தியாவுக்கான ரஷிய துணை தூதா் ரோமன் பாபுஷ்கின் திங்கள்கிழமை தெரிவித்தாா். அண்மையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கும் இந்தியா-பராகுவே: பிரதமா் மோடி

புது தில்லி: ‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதுபோல, இணைய குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பொது சவால்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும்... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா ஆா்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

புது தில்லி: இந்தியாவில் தனது மின்சார காா்களை விற்பனை செய்ய மட்டுமே டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டுகிறது; இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆா்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சா் ஹெச்.டி.... மேலும் பார்க்க

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை முதலீட்டுக்கு எண்ணற்ற வாய்ப்புகள்: பிரதமா் மோடி

புது தில்லி: ‘இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. இங்கு முதலீடுகளை மேற்கொள்ள சா்வதேச நிறுவனங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’ என பிரதமா் நரேந்திர மோடி திங்கள... மேலும் பார்க்க