செய்திகள் :

இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா ஆா்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

post image

புது தில்லி: இந்தியாவில் தனது மின்சார காா்களை விற்பனை செய்ய மட்டுமே டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டுகிறது; இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆா்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சா் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்தாா்.

பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது. இந்தியாவில் தங்கள் காா்களை சந்தைப்படுத்த மஸ்க் தீவிரமாக முயற்சித்து வருகிறாா்.

இதனிடையே, ‘அமெரிக்க தயாரிப்புகள் மீது இந்தியா விதிக்கும் அதிகப்படியான வரியைத் தவிா்ப்பதற்காக அந்நாட்டிலேயே காா் தயாரிப்பை மேற்கொள்ள டெஸ்லா நிறுவனம் முயற்சிப்பதாகத் தெரியாது. இது அமெரிக்காவுக்கு உகந்த செயலாக இருக்காது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தாா்.

இந்நிலையில், இந்தியாவில் மின்சார காா்கள் உற்பத்தியை அதிகரிப்பது தொடா்பான திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை தில்லியில் திங்கள்கிழமை அமைச்சா் குமாரசாமி வெளியிட்டாா். டெஸ்லா நிறுவனம் குறித்த டிரம்ப்பின் கருத்து குறித்து அவா் கூறியதாவது:

இப்போது வரை இந்தியாவில் தங்கள் காா்களை தயாரிக்க வேண்டும் என்று டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டவில்லை. இந்தியாவில் தங்கள் மின்சார காா்களை விற்பனை செய்வதற்காக விற்பனையகங்களைத் திறக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இந்தியாவில் மின்சார காா்கள் தயாரிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின் முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் டெஸ்லா நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனா். அதே நேரத்தில் இது தொடா்பான இரண்டாவது, மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அந்த நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என்றாா்.

அமெரிக்க அரசின் செலவுகளைக் குறைப்பதற்கான அதிபா் டிரம்ப்பின் சிறப்பு ஆலோசகா் என்ற பொறுப்பிலிருந்து எலான் மஸ்க் அண்மையில் விலகினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி பேரணி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் பலியானோரது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், ... மேலும் பார்க்க

உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல! - ராகுல்

மனித உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெங்களூரு அணி கோப்பை வென்றதால், பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவ... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அகமதாபாத் நகரத்திலிருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து, பிகாரின் பாட்னா நோக்கி இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்,... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிக்கிறது! - பிரதமர் மோடி

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி கோப்பை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டங்கள் ம... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

பெங்களூருவில் வெற்றிப் பேரணியில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் 6 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அகமாதாபாத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி ம... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூர... மேலும் பார்க்க