செய்திகள் :

கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

post image

ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி கோப்பை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் செய்யப்பட்டு பேருந்து பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, மாலை 5 மணியளவில் கர்நாடக சட்டப் பேரவையிலிருந்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், ஆளுநர் தலைமையில் சின்னசாமி திடல் வரை அணிவகுப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், ரசிகர்கள் ஆரவரத்தில் ஈடுபட்டு கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினர்.

இதனால், காவல் துறையினர் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த லேசான தடியடியிலும் ஈடுபட்டனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கியதில் ஒரு பெண் உள்பட 10 பேர் பலியாகியுள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஆளும் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பற்ற தன்மையே இந்த பலிக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சின்னசாமி திடலில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற இருந்த நிலையில் , பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகனப் பேரணியை ரத்து செய்தோம்.

5,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஆர்சிபி வெற்றிப் பேரணி: கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி!

உ.பி.யில் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்தவர் என்கவுன்டர்!

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் கூலித் தொழிலாளியின் ... மேலும் பார்க்க

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக... மேலும் பார்க்க

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்... மேலும் பார்க்க

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். பாகிஸ்தானில் இருந... மேலும் பார்க்க

மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் மனு

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் ஒருவா் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு... மேலும் பார்க்க