செய்திகள் :

"குழந்தை இறந்துவிட்டது" - அரசு மருத்துவமனை மறுத்ததால் தனியார் மருத்துவமனையில் பிரசவம்; என்ன நடந்தது?

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அங்குள்ள ஹசரிபாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மனீஷா குமாரி என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக வந்தார்.

அவர் தனது ஊருக்கு அருகில் எந்தவித மருத்துவமனையும் இல்லாததால் 120 கிலோமீட்டர் பயணம் செய்து அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

கர்ப்பம்
கர்ப்பம்

ஆனால் பணியிலிருந்த செவிலியர் கர்ப்பிணிப் பெண்ணைப் பரிசோதித்துவிட்டு, ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்றும், வயிற்றில் இருக்கும் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

அதற்கு மனீஷா எதிர்ப்பு தெரிவித்தபோது ஆப்ரேசன் தியேட்டரில் தலைமை செவிலியர் இருப்பார் என்றும், அவரைச் சென்று பார்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து மனீஷா கூறுகையில், ''நான் ஆப்ரேசன் தியேட்டருக்குச் சென்றபோது அங்கிருந்த செவிலியர் ஆபரேசன் தியேட்டரை மூடிவிட்டு உள்ளே உறங்கிக்கொண்டிருந்தார்.

கதவைத் தட்டிப்பார்த்தேன். ஆனால் அவர் கதவைத் திறக்கவில்லை. எனக்கு வயிற்று வலி அதிகரித்தது. இதனால் வேறு வழியில்லாமல் அருகில் 2 கிலோமீட்டர் தொலைவிலிருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம்.

அங்கு அனைத்து சோதனைகளையும் எடுத்துவிட்டு என்னை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு  சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது'' என்று தெரிவித்தார்.

Hospital

இது குறித்து அரசு மருத்துவ அதிகாரி மருத்துவர் சசி பிரகாஷ் கூறுகையில், ''நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடந்தது துரதிருஷ்டவசமானது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

மாநிலச் சுகாதாரத்துறை அமைச்சர் அன்சாரியும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Mahua Moitra: TMC எம்.பி மஹுவா மொய்த்ரா பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி-யுடன் திருமணம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக எம்.பி.யாக இருக்கிறார். ஏற்கனவே வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திரு... மேலும் பார்க்க

நெதர்லாந்து மியூசியத்தில் `200 ஆண்டுகள் பழமையான ஆணுறை!' - அதில் உள்ள படம் சொல்வதென்ன?

19ஆம் நூற்றாண்டில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஓன்று நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணுறையில், ஒரு கன்னியாஸ்திரி மற்றும் ம... மேலும் பார்க்க

ஒரேஇடத்தில் நின்றுகொண்டு மாதம் ரூ.5 - 8 லட்சம் வரை சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர்! - இது எப்படி?

மும்பையின் புறநகர் பகுதி ஆட்டோக்களால் சூழப்பட்ட நெருக்கடியை சந்தித்து வரும் ஒரு பகுதியாகும். இந்த கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வண்டியை எங்கேயும் கொண்டு செல்லாமல் ... மேலும் பார்க்க

ம.பி: மர்ம முறையில் கணவர் மரணம்; காணாமல் போன பெண்- தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்தது என்ன?

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன் மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் தேனிலவுக்கு மேகாலயா சென்றுள்ளனர். அங்கு இருவரும் மே 23ஆம் தேதி காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த ந... மேலும் பார்க்க

ஆக்ரா: ”ரீல்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க...” - யமுனை நதியில் மூழ்கி பலியான 6 பெண்கள்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஆற்றங்கரையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவின் சிக்கந்த்ரா காவல் நிலையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம், முழு க... மேலும் பார்க்க

ஆந்திரா: தினமும் உரியும் தோல், 1 மணி நேரத்துக்கு ஒரு முறை குளியல்; அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்

ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்த நோயால் தினமும் தோல் உரிதல் ஏற்படுகிறது. பாமு பிரசாத் என்று இளைஞர் மிகுந்த சவாலான வாழ... மேலும் பார்க்க