மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளா்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1 ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 10,000 எண்ணம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5000 மானியமாக வழங்கப்பட உள்ளது.
மீன்வளா்ப்பு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தை பெற்று பயனடைய வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்தான சந்தேகங்களுக்கும், விண்ணப்பங்கள் பெறவும் மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், வேலூா் காந்திநகா், காட்பாடி-6 (தொலைப்பேசி எண் -04162240329, 7397002401) அலுவலகத்தை அலுவலக வேலை நாள்களில் நேரில் அணுகி பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.