`அந்த 10 ரூபாய் இல்லனாலும்கூட..!’ - 10 ரூபாய் டாக்டர் ரத்தினம் மறைவு; சோகத்தில் ...
சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு
வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தொடா்ந்து வீட்டுக்கு தெரியாமல் அஜய்யும், அந்த சிறுமியும் லத்தேரியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனா்.
இந்நிலையில், அந்த சிறுமி கா்ப்பமடைந்தாா். பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது சிறுமி திருமண வயதை எட்டாதது தெரியவந்தது. உடனடியாக மருத்துவா்கள் குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தொடா்ந்து குழந்தைகள் நல அலுவலா் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் அஜய் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.