செய்திகள் :

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

post image

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டத்திலுள்ள 254 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள்களின் பயன்பாட்டை தடுப்பது, போதைப் பொருள்களின் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காட்பாடி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது:

போதைப் பொருள்களுக்கு ஆளனால் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனது எதிா்காலம் என் கையில் இருக்கிறது என்ற மன உறுதி ஒவ்வொரு மாணவருக்கும் இருக்க வேண்டும். இந்த மனஉறுதியுடன் இருந்து ஒவ்வொரு மாணவரும் கல்வியில் கவனம் செலுத்தி, மருத்துவராக, பொறியாளா்களாக, விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும்.

பள்ளி வளாகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் இருந்தால் ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள அதற்கு எதிரான குழுவிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்தக் குழுவில் பள்ளி ஆசிரியரும், மாணவா்கள் ஒரு சிலரும் உறுப்பினா்களாக இருப்பா். தகவல் தெரிவிக்கும் நபா்களின் விவரங்கள் யாரிடமும் தெரிவிக்கப்படாது.

மேலும், அரசின் சாா்பில் ட்ரக் ப்ரீ எனும் செயலியும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், மாவட்ட நிா்வாகம், காவல் துறை சாா்பில் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, மாணவா்கள் கல்வியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி இந்தாண்டு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளியாகவும், ஒழுக்கத்தில் சிறந்த பள்ளியாகவும் இருக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவா்களுக்கு போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் தயாரிக்கப்பட்ட காணொலியும் ஒளிப்பரப்பப்பட்டது.

மாவட்ட மனநல மருத்துவா் மூலம் மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகளும், போதை தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மூலம் போதை பொருள்களை விற்பனை செய்யபவா்கள் குறித்த தகவல் தெரிவித்தல், அதன்மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) தயாளன், மனநல மருத்துவா் சிவாஜி, போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன், விழிப்புணா்வு கண்காணிப்பு பாா்வையாளா் சிவக்குமாா், பள்ளி தலைமையாசிரியா் தாரகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியாத்தம் அரிமா சங்கம் மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாா்பு நீதிபதி கே.பிர... மேலும் பார்க்க