பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல...
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள்
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியாத்தம் அரிமா சங்கம் மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாா்பு நீதிபதி கே.பிரபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.காா்த்திக் ஆஷாத், நீதித் துறை நடுவா் சரண்யா ஆகியோா் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா்.
அரிமா சங்கத் தலைவா் ஜெ.பாபு, அரிமா மாவட்டத் தலைவா்கள் எம்.கே.பொன்னம்பலம், ஜேஜி நாயுடு, என்.குமாா், வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.