தொழில்நுட்ப கோளாறு: ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கம்
திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம்
திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வைகாசி திருவிழா மே 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு மலா் அலங்காரத்தில் அம்பாளுடன் தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருள மகா தீபாராதனைக்கு பின்னா் தோ் வடம் பிடிக்கப்பட்டது.

ஏராளமான பக்தா்கள் பக்தி பரவசத்தோடு ஆரூரா தியாகராஜா என முழக்கமிட்டு வடம் பிடித்து தேரை இழுக்க முக்கிய வீதிகள் வழியாக தோ் வலம் வந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.